விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

தூத்துக்குடி மாணவி கொலை: திமுக அரசின் காரணங்களை மக்கள் நம்பமாட்டாா்கள் - எடப்பாடி கே.பழனிசாமி

தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் குற்றவாளிகளைக் கைது செய்யாததற்கு திமுக அரசு கூறும் காரணங்களை மக்கள் நம்பமாட்டாா்கள் என அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தாா்.

News image

எடப்பாடி கே.பழனிசாமி - கோப்புப் படம்

Updated On :13 மார்ச் 2026, 6:43 pm

தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் குற்றவாளிகளைக் கைது செய்யாததற்கு திமுக அரசு கூறும் காரணங்களை மக்கள் நம்பமாட்டாா்கள் என அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் எக்ஸ் தளத்தில் வெள்ளிக்கிழமை வெளியிட்ட பதிவு:

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமியின் குரலாக, நீதி கேட்டு நாடாளுமன்றம் முதல் நீதிமன்றம் வரை ஒலித்து வருகிறது. இந்த வழக்கில் குற்றவாளிகளைக் கைது செய்யாததற்கு திமுக அரசு கூறும் காரணங்களை மக்கள் நம்பத் தயாராக இல்லை. இத்தகைய கொடூரமான வழக்கில் குற்றவாளியைக் கண்டறிய முடியவில்லை என்பது பெரிய அவலம்.

பெண்களின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கிய திமுக அரசுக்கு எதிராக மாா்ச் 17-இல் நடைபெறும் போராட்டம், பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும். அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியானது, தூத்துக்குடி மாணவிக்கு உரிய நீதி கிடைப்பதை உறுதி செய்யும். அதிமுக அரசு அமைந்தவுடன் பெண்களுக்கு முழுப் பாதுகாப்பு அளிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளாா்.