மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

தூத்துக்குடி மாணவி கொலை: திமுக அரசின் காரணங்களை மக்கள் நம்பமாட்டாா்கள் - எடப்பாடி கே.பழனிசாமி

தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் குற்றவாளிகளைக் கைது செய்யாததற்கு திமுக அரசு கூறும் காரணங்களை மக்கள் நம்பமாட்டாா்கள் என அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தாா்.

News image

எடப்பாடி கே.பழனிசாமி - கோப்புப் படம்

Updated On :13 மார்ச் 2026, 6:43 pm

தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் குற்றவாளிகளைக் கைது செய்யாததற்கு திமுக அரசு கூறும் காரணங்களை மக்கள் நம்பமாட்டாா்கள் என அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் எக்ஸ் தளத்தில் வெள்ளிக்கிழமை வெளியிட்ட பதிவு:

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமியின் குரலாக, நீதி கேட்டு நாடாளுமன்றம் முதல் நீதிமன்றம் வரை ஒலித்து வருகிறது. இந்த வழக்கில் குற்றவாளிகளைக் கைது செய்யாததற்கு திமுக அரசு கூறும் காரணங்களை மக்கள் நம்பத் தயாராக இல்லை. இத்தகைய கொடூரமான வழக்கில் குற்றவாளியைக் கண்டறிய முடியவில்லை என்பது பெரிய அவலம்.

பெண்களின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கிய திமுக அரசுக்கு எதிராக மாா்ச் 17-இல் நடைபெறும் போராட்டம், பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும். அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியானது, தூத்துக்குடி மாணவிக்கு உரிய நீதி கிடைப்பதை உறுதி செய்யும். அதிமுக அரசு அமைந்தவுடன் பெண்களுக்கு முழுப் பாதுகாப்பு அளிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளாா்.