47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

ராஜஸ்தானில் ஏப்.30 வரை பகுதிநேரப் பொதுமுடக்கம் அறிவிப்பு

அதிகரித்துவரும் கரோனா தொற்று பரவல் காரணமாக ராஜஸ்தான் மாநிலத்தில் ஏப்ரல் 30ஆம் தேதி வரை பகுதி நேரப் பொதுமுடக்கம் அமல்படுத்தப்படுவதாக மாநில அரசு அறிவித்துள்ளது.

News image
ராஜஸ்தானில் ஏப்.30 வரை பகுதிநேரப் பொதுமுடக்கம் அறிவிப்பு
Updated On :14 ஏப்ரல் 2021, 3:38 pm

DIN

அதிகரித்துவரும் கரோனா தொற்று பரவல் காரணமாக ராஜஸ்தான் மாநிலத்தில் ஏப்ரல் 30ஆம் தேதி வரை பகுதி நேரப் பொதுமுடக்கம் அமல்படுத்தப்படுவதாக மாநில அரசு அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் கரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக பல்வேறு மாநிலங்களிலும் இரவுநேரப் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் வேகமாகப் பரவி வரும் கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. 

அதனைத் தொடர்ந்து ராஜஸ்தான் மாநில அரசு புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிவிப்பில் மாநிலம் முழுவதும் ஏப்ரல் 16ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை பகுதிநேரப் பொதுமுடக்கம் விதிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை அமலில் இருக்கும் இந்தப் பொதுமுடக்கத்தில் இருந்து அத்தியாவசிய சேவைகள் மற்றும் மருத்துவ சேவைகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.