பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

ஹரித்வார் 5 நாள் கும்பமேளாவில் 1,700 பேருக்கு கரோனா பாதிப்பு

கரோனா தொற்று வேகமாகப் பரவி வரும் நிலையில், ஹரித்வாரில் நடைபெற்ற 5 நாள் கும்பமேளாவில் பங்கேற்ற 1700 பேருக்கு இதுவரை கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image
ஹரித்வார் 5 நாள் கும்பமேளாவில் 1,700 பேருக்கு கரோனா பாதிப்பு
Updated On :15 ஏப்ரல் 2021, 11:12 am

DIN


கரோனா தொற்று வேகமாகப் பரவி வரும் நிலையில், ஹரித்வாரில் நடைபெற்ற 5 நாள் கும்பமேளாவில் பங்கேற்ற 1700 பேருக்கு இதுவரை கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதாவது, கும்பமேளா நடைபெற்ற ஹரித்வார் பகுதியில் ஏப்ரல் 10 முதல் 14-ஆம் தேதி வரை 1,701 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஹரித்வாரில் நடைபெற்ற கும்பமேளாவில் பங்கேற்ற பக்தர்கள் உள்பட பல்வேறு குழுக்களைச் சேர்ந்தவர்களுக்கு ஆர்டி-பிசிஆர் மற்றும் ரேபிட் ஆன்டிஜென் பரிசோதனை முறைகளில் கரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.

இன்னமும் பலரது கரோனா பரிசோதனை முடிவுகள் வெளியாகவில்லை. அனைத்தும் வெளியான நிலையில், கும்ப மேளா நடைபெற்ற தளத்தில் சுமார் 2000 பேர் வரை கரோனா பாதிப்பு அதிகரிக்கும் என்று ஹரித்வாரா மூத்த மருத்துவ அதிகாரி ஷாம்பு குமார் ஜா தெரிவித்துள்ளார்.

கடந்த ஐந்து நாள்களில் சுமார் 48.51 லட்சம் பேர் கும்ப மேளாவில் பங்கேற்று புனித நீராடியிருப்பார்கள் என்கிறது புள்ளி விவரம்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.