நாட்டில் இதுவரை 11.72 கோடி டோஸ் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில்,
வெள்ளிக்கிழமை காலை 7 மணி நிலவரப்படி நாடு முழுவதும் மொத்தமாக 11,72,23,509 டோஸ் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் 90,82,999 சுகாதாரப் பணியாளர்களுக்கு முதல் தவணை தடுப்பூசியும், 56,34,634 பேருக்கு 2-ம் தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது.
மேலும் முன்களப்பணியாளர்கள் 1,02,93,524(முதல் தவணை), 51,52,891 ( 2-ம் தவணை), 60 வயதுக்கு மேற்பட்டோர் 4,42,30,842 (முதல் தவணை), 30,97,961 (2-ம் தவணை, 45 முதல் 60 வயதுக்கு இடைப்பட்டோர் 3,87,41,890 (முதல் தவணை), 9,88,768 ( 2-ம் தவணை) பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 27 லட்சம் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் ஜனவரி 16 ஆம் தேதி முதல் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வரும் நிலையில் பல்வேறு மாநிலங்களில் தடுப்பூசி திருவிழா நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.