இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

'ஒருநாளில் 27 லட்சம் டோஸ்; இதுவரை 11.72 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது'

நாட்டில் இதுவரை 11.72 கோடி டோஸ் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :16 ஏப்ரல் 2021, 7:31 am

DIN

நாட்டில் இதுவரை 11.72 கோடி டோஸ் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில், 

வெள்ளிக்கிழமை காலை 7 மணி நிலவரப்படி நாடு முழுவதும் மொத்தமாக 11,72,23,509 டோஸ் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 

நாடு முழுவதும் 90,82,999 சுகாதாரப் பணியாளர்களுக்கு முதல் தவணை தடுப்பூசியும், 56,34,634 பேருக்கு 2-ம் தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது.

மேலும் முன்களப்பணியாளர்கள் 1,02,93,524(முதல் தவணை), 51,52,891 ( 2-ம் தவணை), 60 வயதுக்கு மேற்பட்டோர் 4,42,30,842 (முதல் தவணை), 30,97,961 (2-ம் தவணை, 45 முதல் 60 வயதுக்கு இடைப்பட்டோர் 3,87,41,890 (முதல் தவணை), 9,88,768 ( 2-ம் தவணை) பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 27 லட்சம் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

நாடு முழுவதும் ஜனவரி 16 ஆம் தேதி முதல் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வரும் நிலையில் பல்வேறு மாநிலங்களில் தடுப்பூசி திருவிழா நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.