பிரதமா் மோடியுடன் விஜய் இன்று சந்திப்பு உலகளாவிய பங்குச்சந்தை மதிப்பு: இந்தியாவை முந்தி தைவான் 5-ஆவது இடம்! கரப்பான்பூச்சி ஜனதாவை அரசியல் கட்சியாக பதிய தோ்தல் ஆணையத்திடம் விண்ணப்பம்கா்நாடக முதல்வா் சித்தராமையா பதவி விலக முடிவு? இறப்பு சான்றிதழ்களைப் பிழையின்றி வழங்க தணிக்கைக் குழு: அரசாணை வெளியீடு மாணவா்கள் பள்ளிக்கு இருசக்கர மோட்டாா் வாகனம் ஓட்டி வந்தால் பறிமுதல் செய்யப்படும்: கல்வித் துறை எச்சரிக்கை பசு வதைக்கு முழுத் தடை: அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு திருவாரூர் புறவழிச்சாலை, மேம்பாலம் அமைக்க ரூ.1,427 கோடிக்கு ஒப்புதல்: மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தகவல்
/

ம.பி.யில் ரூ.25 லட்சம் கரோனா நிதியுதவியளித்த காங். எல்எல்ஏ.க்கள்

மத்தியப் பிரதேச மாநிலத்தில், காங்கிரஸ் எம்எல்ஏ.க்கள் இருவர் கரோனா நிதியுதவியாக ரூ.25 லட்சம் வழங்கியுள்ளனர். 

News image
Updated On :16 ஏப்ரல் 2021, 6:11 pm IST

மத்தியப் பிரதேச மாநிலத்தில், காங்கிரஸ் எம்எல்ஏ.க்கள் இருவர் கரோனா நிதியுதவியாக ரூ.25 லட்சம் வழங்கியுள்ளனர். 

முன்னாள் மாநில அமைச்சராகவும், போபால் தென்மேற்கு எம்எல்ஏ.வாக இருந்த சர்மா மற்றும் காஸ்ராவாட்டைச் சேர்ந்த எம்எல்ஏ யாதவ் ஆகிய இருவரும் கரோனா தொற்றுக்கு நிவாரண நிதி அளித்துள்ளனர். 

யாதவ் காஸ்ராவாட்டில் உள்ள சமூக சுகாதார மையத்திற்கு ரூ.10 லட்சமும், கார்கோனில் உள்ள மாவட்ட மருத்துவமனைக்கு ரூ.5 லட்சமும் வழங்கினார். மேலும் சர்மா உள்ளூர் மருத்துவ உள்கட்டமைப்புக்கு ரூ.10 லட்சம் நிவாரணமாக வழங்கியுள்ளார். 

இதற்கு, காங்கிரஸ் மூத்த தலைவரும், மாநிலங்களவை எம்பி.யுமான திக்விஜயா சிங் எம்எல்ஏ.,க்கள் இருவரையும் வெகுவாக பாராட்டினார். மேலும், கரோனா நிவாரண நிதியளிக்க எம்.எல்.ஏ.க்கள் முன்வரவேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.