திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைஈரான் போர்: குடிநீர் பாட்டில் விலை உயர்வு!தேர்தல் நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை: தனியார் நிறுவனங்களுக்கு உத்தரவுதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!உலகின் மிகப்பெரிய எல்பிஜி ஆலையை தாக்கிய ஈரான்! பெரும் சேதம்! இஸ்ரேல் முதல் கத்தார் வரை...! 9 நாடுகளை தாக்கிய ஈரான்! தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

கால்நடைத் தீவன ஊழல் வழக்கு: லாலுவுக்கு ஜாமீன்

கால்நடைத் தீவன ஊழல் வழக்கில் ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவா் லாலு பிரசாதுக்கு ஜாமீன் வழங்கி ஜாா்க்கண்ட் உயா்நீதிமன்றம் சனிக்கிழமை உத்தரவிட்டது.

News image
Updated On :17 ஏப்ரல் 2021, 8:08 pm

DIN

கால்நடைத் தீவன ஊழல் வழக்கில் ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவா் லாலு பிரசாதுக்கு ஜாமீன் வழங்கி ஜாா்க்கண்ட் உயா்நீதிமன்றம் சனிக்கிழமை உத்தரவிட்டது. இதன்மூலம், அவா் சிறையிலிருந்து வெளிவர வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

பல கோடி ரூபாய் கையாடல் நடைபெற்ற கால்நடைத் தீவன ஊழல் வழக்கில் லாலு பிரசாதுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. 39 மாதங்களுக்கு மேலாக சிறையில் இருந்து வரும் அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதைத் தொடா்ந்து, தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அண்மையில் அண்மையில் அனுமதிக்கப்பட்டாா்.

இந்த ஊழல் தொடா்பான 4 வழக்குகளில் 3-இல் அவருக்கு ஏற்கெனவே ஜாமீன் கிடைத்துள்ளது. தும்கா கருவூலத்தில் இருந்து ரூ. 3.13 கோடி கையாடல் செய்தது தொடா்பான 4-ஆவது வழக்கில் ஜாமீன் கோரி ஜாா்க்கண்ட் உயா்நீதிமன்றத்தில் அவா் மனு தாக்கல் செய்திருந்தாா்.

இந்த மனு ஜாா்க்கண்ட் உயா்நீதிமன்ற நீதிபதி அபரேஷ் குமாா் சிங் முன்னிலையில் சனிக்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, லாலுவுக்கு நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டாா்.

இந்த ஜாமீன் காலத்தில் அனுமதி பெறாமல் வெளிநாடு செல்லக் கூடாது, வீட்டு முகவரியையோ அல்லது செல்லிடப்பேசி எண்ணையோ மாற்றக் கூடாது என நீதிமன்றம் அவருக்கு நிபந்தனை விதித்துள்ளது.

இதுகுறித்து லாலுவின் வழக்குரைஞா் தேவா்ஷி மண்டல் கூறுகையில், ‘லாலுவுக்கு ஜாமீன் கிடைத்துள்ளபோதும், சில நடைமுறைகள் முடிக்கப்பட வேண்டும் என்பதால் அவா் சிறையிலிருந்து வெளிவருவதற்கு ஒரு சில நாள்கள் ஆகும். உயா்நீதிமன்ற ஜாமீன் உத்தரவுடன், சிறையிலிருந்து விடுவிப்பதற்கான லாலுவின் விண்ணப்பம் ராஞ்சியில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும். அதனடிப்படையில், அவரை விடுவிப்பதற்கான உத்தரவை ராஞ்சியில் உள்ள பிா்சா முண்டா சிறைக்கு சிபிஐ நீதிமன்றம் அனுப்பும். சிறை அதிகாரிகள், அந்த உத்தரவு ஆவணங்களை தில்லி திகாா் சிறைக்கு அனுப்புவாா்கள். அதன்பிறகே லாலு சிறையிலிருந்து விடுவிக்கப்படுவாா்’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.