யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

மக்களுக்கும் மத்திய அரசுக்கும் மத்தியில் தடையாக நிற்கும் மம்தா: மோடி

மத்திய அரசு கொண்டு வரும் எந்த திட்டமும் மக்களை சென்றடையாத வண்ணம் ஒரு சுவரைப் போல தடையாக இருக்கிறார் மம்தா பானர்ஜி என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

News image
மக்களுக்கும் மத்திய அரசுக்கும் மத்தியில் தடையாக நிற்கும் மம்தா: மோடி
Updated On :17 ஏப்ரல் 2021, 10:15 am

PTI


மத்திய அரசு கொண்டு வரும் எந்த திட்டமும் மக்களை சென்றடையாத வண்ணம் ஒரு சுவரைப் போல தடையாக இருக்கிறார் மம்தா பானர்ஜி என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

மேற்கு வங்க மாநிலம் அஸன்சோலில் இன்று நடைபெற்ற பாஜக பொதுக் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, முத்தலாக் முறையை ஒழிக்க மத்திய அரசு சட்டம் கொண்டு வந்தது. விவசாயிகளைக் காக்க சட்டத் திருத்தம் கொண்டு வந்தது. அம்பான் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவியது மத்திய அரசு. ஆனால் மத்திய அரசு கொண்டு வரும் எந்த நலத்திட்டங்களும் மக்களைச் சென்றடையாமல் ஒரு சுவரைப் போல மம்தா பானர்ஜி தடுத்து வந்தார். 

மாநிலத்தின் முன்னேற்றத்துக்கு எதிராக ஒரு சுவரைப் போல தடுத்து வந்தார். புலம்பெயர்ந்தவர்களுக்காக மத்திய அரசு உதவி செய்ய முன்வந்தது. ஆனால் அதனைக் கூட மம்தா எதிர்த்தார் என்று மோடி கூறியுள்ளார்.

மேலும், மத்திய அரசு நடத்தும் எந்த கூட்டத்திலும் மேற்கு வங்கம் சார்பில் மம்தா பானர்ஜி பங்கேற்பதில்லை. நீதி ஆயோக் கூட்டம், கரோனா பரவலைத் தடுப்பது குறித்த கூட்டங்களிலும் கூட அவர் பங்கேற்கவில்லை என்று மோடி குற்றம்சாட்டினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.