பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

நாட்டில் 12 கோடி பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளன: மத்திய அரசு

நாடு முழுவதும் இதுவரை 12 கோடி பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

News image

நாட்டில் 12 கோடி பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளன: மத்திய அரசு

Updated On :17 ஏப்ரல் 2021, 7:19 am

நாடு முழுவதும் இதுவரை 12 கோடி பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 30 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

நாடு முழுவதும் ஜனவரி 16-ம் தேதி முதல் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. முதலில் சுகாதாரத் துறையினர், மருத்துவர்கள், தூய்மைப் பணியாளர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. இரண்டாவது கட்டமாக 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டது.

அதனைத் தொடர்ந்து தற்போது 3-வது கட்டமாக 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. 

காலை 7 மணி நிலவரப்படி இதுவரை மொத்தமாக 11,99,37,641 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கடந்த ஒரு நாளில் மட்டும் 30 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

நாட்டில் 8 மாநிலங்களில் மட்டும் இதுவரை 79.32 சதவிகித கரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன. 

நாடு முழுவதும் 91,05,429 சுகாதாரப் பணியாளர்களுக்கு முதல் தவணை தடுப்பு மருந்தும், 56,70,818 பேருக்கு 2-ம் தவணை தடுப்பு மருந்தும் செலுத்தப்பட்டுள்ளது.

60 வயதுக்கு மேற்பட்டோரில் 4,49,35,011 பேருக்கு முதல்கட்ட தடுப்பூசியும், 34,88,257 பேருக்கு இரண்டாம் கட்ட தடுப்பூசியும் போடப்பட்டுள்ளது.

இதேபோன்று 45 வயதுக்கு மேற்பட்டோரில் 3,92,23,975 பேருக்கு முதல்கட்ட கரோனா தடுப்பூசியும், 9,61,510 பேருக்கு இரண்டாம் கட்ட கரோனா தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.