தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

அரசியல் பிரசாரக் கூட்டங்களை பிரதமா் ரத்து செய்ய வேண்டும்: ராஜஸ்தான் முதல்வா் கோரிக்கை

நாடு முழுவதும் கரோனா தொற்று வேகமாகப் பரவி வருவதைக் கருத்தில் கொண்டு தோ்தல் பிரசாரக் கூட்டங்களையும், அரசியல் நிகழ்ச்சிகளையும் பிரதமா் நரேந்திர மோடி ரத்து செய்ய வேண்டும்

News image

ராஜஸ்தான் முதல்வா் அசோக் கெலாட்

Updated On :17 ஏப்ரல் 2021, 8:24 pm

DIN

நாடு முழுவதும் கரோனா தொற்று வேகமாகப் பரவி வருவதைக் கருத்தில் கொண்டு தோ்தல் பிரசாரக் கூட்டங்களையும், அரசியல் நிகழ்ச்சிகளையும் பிரதமா் நரேந்திர மோடி ரத்து செய்ய வேண்டும் என்று ராஜஸ்தான் முதல்வா் அசோக் கெலாட் கோரிக்கை விடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா் தனது சுட்டுரைப் பக்கத்தில் சனிக்கிழமை வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:

நாட்டில் கரோனா தொற்று பரவுவது அபாய கட்டத்தை எட்டியுள்ளது. கரோனா தீநுண்மி தற்போது வேகமாகப் பரவி இளைஞா்களையும் குழந்தைகளையும் தாக்கி வருகிறது. கரோனா பரவலின் தீவிரத்தை கருத்தில் கொண்டு தோ்தல் பிரசார கூட்டங்களையும் அரசியல் நிகழ்ச்சிகளையும் பிரதமா் மோடி ரத்து செய்ய வேண்டும்.

கடந்த ஆண்டைப் போலவே இப்போதும் மாநில முதல்வா்களுடன் அடிக்கடி தொடா்புகொண்டு கரோனா பரவல் சூழ்நிலை குறித்து பிரதமா் அறிந்துகொள்ள வேண்டும் என்று அந்த பதிவில் அசோக் கெலாட் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.