கர்நாடகத்தில் 15 ஆயித்தைத் தாண்டிய தினசரி கரோனா

கர்நாடகத்தில் புதிதாக 15,785 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது  உறுதி செய்யப்பட்டது.
கர்நாடகத்தில் 15 ஆயித்தைத் தாண்டிய தினசரி கரோனா

கர்நாடகத்தில் புதிதாக 15,785 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது  உறுதி செய்யப்பட்டது.

கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகளை கர்நாடக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.

அதில், கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 15,785 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து மாநிலத்தில் மொத்தமாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 11,61,065-ஆக அதிகரித்துள்ளது.

கரோனாவால் பாதிக்கப்பட்டு  1,42,084 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணிநேரத்தில் கரோனா தொற்றிலிருந்து  7,098 பேர் குணமடைந்ததால், மொத்தமாக குணமடைந்தோர் எண்ணிக்கை 10,21,250-ஆக உயர்ந்துள்ளது.

புதிதாக 146 பேர் உயிரிழந்ததால், இதுவரை மொத்தமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 13,497-ஆக அதிகரித்துள்ளது என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com