உ.பி.யில் முன்னாள் சமாஜ்வாதி கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ. கோபால் கிருஷ்ணா சக்சேனா கரோனா பாதித்து திங்கள்கிழமை பரேலியில் உள்ள மருத்துவமனையில் உயிரிழந்தார் என்று அவர் மகன் தெரிவித்தார்.
அவருக்கு வயது 70. லக்னௌவில் அவருக்கு சரியான சிகிச்சை பெற முடியாத நிலையில், சனிக்கிழமை பரேலியில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் இன்று காலை 5 மணியளவில் மூச்சுத்திணறல் ஏற்பட்ட காலமானர்.
எனது தந்தை கடந்த சில நாள்களாக மூச்சு விடுவதில் சிரமம் இருந்ததாகவும், பின்னர் சோதனையில் கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.