தேர்தல் பணிகளுக்காக கூடுதல் பணியிடங்கள் - அரசாணை வெளியீடுதிருநள்ளாறு சனீஸ்வரர் கோயிலில் நடிகர் சிவகார்த்திகேயன் சாமி தரிசனம்திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயிலில் தேரோட்டம்: துர்கா ஸ்டாலின் பங்கேற்பு!ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் கே.பி.சுந்தராம்பாள் சிலையை முதல்வர் திறந்துவைத்தார்ஈரானை உலுக்கும் தாக்குதல்கள்: பலி 1,300-ஐ கடந்தது!மார்ச் முதல் வாரத்தில் வளைகுடா நாடுகளிலிருந்து 52,000 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்: மத்திய அரசுசமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் பூச்சொரிதல் விழா தொடங்கியது
/

'புலம்பெயர் தொழிலாளர்களுக்கு பணம் கொடுக்காமல் பழி போடுகிறது மத்திய அரசு' - ராகுல் காந்தி

இடம்பெயரும் புலம்பெயர் தொழிலாளர்களின் வங்கிக்கணக்குகளில் தற்போது பணம் செலுத்துவது மத்திய அரசின் கடமை என்று ன்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். 

News image
ராகுல் காந்தி
Updated On :20 ஏப்ரல் 2021, 5:57 am

DIN

இடம்பெயரும் புலம்பெயர் தொழிலாளர்களின் வங்கிக்கணக்குகளில் பணம் செலுத்தாமல் கரோனாவை பரப்புவதாக மத்திய அரசு அவர்களை குறை கூறுகிறது என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். 

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், பல்வேறு மாநிலங்களில் இருந்து புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊருக்குத் திரும்பும் நிலையில் அவர்களின் வங்கிக்கணக்குகளில் மத்திய அரசு பணம் செலுத்த வேண்டும். 

மாறாக, கரோனாவைப் பரப்புவதாக கூறும் புலம்பெயர் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்துக்கு நடவடிக்கை எடுக்குமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார். 

தில்லி, மகாராஷ்டிரம், ராஜஸ்தான், தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் கரோனா பரவல் அதிகரித்ததைத் தொடர்ந்து விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் காரணமாக புலம்பெயர்ந்தோர் தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்பத் தொடங்கியுள்ளனர். நேற்று தில்லியில் ஒரு வாரம் ஊரடங்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து புலம்பெயர் தொழிலாளர்கள் கூட்டம் கூட்டமாக தில்லியில் இருந்து புறப்பட்டனர். அதேபோன்று வடமாநிலங்களில் பல்வேறு பகுதிகளில் புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்குத் திரும்பும் முயற்சியில் உள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.