தேர்தலுக்குப் பின் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருக்க மாட்டேன்! - செல்வப்பெருந்தகை காங்கிரஸில் அர்ப்பணிப்போடு பணியாற்றிய பலருக்கு வாய்ப்பு மறுப்பு! - ஜோதிமணி கண்டனம்! மியான்மரின் புதிய அதிபராக ராணுவ அரசின் தலைவர் தேர்வு! அமெரிக்காவின் அதிநவீன எஃப்-15இ போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஈரான்!விஜயின் பெரம்பூர், திருச்சி கிழக்கு வேட்பு மனுக்களில் குறைந்தபட்சம் 6 வேறுபாடு!மகன் தவெகவில் இணைந்தது ஏன்? முன்னாள் பேரவைத் தலைவர் தனபால் விளக்கம்ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸின் சரக்கு கப்பல்! போர்க் காலத்தில் முதல்முறை! புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்காதது ஏன்? - ஏ.சி. சண்முகம் விளக்கம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு?
/

நாட்டு மக்களுக்கு முக்கியத்துவம் அளிக்காதது ஏன்?: மோடிக்கு கேள்வி

கரோனா தடுப்பூசி விவகாரத்தில் நாட்டு மக்களுக்கு முக்கியத்துவம் அளிக்காதது ஏன் என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

News image

காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி (கோப்புப்படம்)

Updated On :21 ஏப்ரல் 2021, 5:06 am

கரோனா தடுப்பூசி விவகாரத்தில் நாட்டு மக்களுக்கு முக்கியத்துவம் அளிக்காதது ஏன் என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த அவர், ''கடந்த 6 மாதங்களில் மட்டும் 1.1 மில்லியன் ரெம்டெசிவிர் மருந்துகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இன்று ரெம்டெசிவிர் மருந்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இதேபோன்று ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலகட்டத்தில் 6 கோடி கரோனா தடுப்பு மருந்துகளை மத்திய அரசு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளது. அந்த காலகட்டத்தில் 3 - 4 கோடி இந்திய மக்கள் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டனர். 

இவ்வாறு தொடர் நடவடிக்கைகள் மூலம் இந்திய மக்களுக்கு பாஜக அரசு முக்கியத்துவம் அளிக்காதது ஏன்?'' என்று பிரதமர் மோடிக்கு பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.