விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

நிலைமை மோசமடைகிறது; புள்ளி விவரங்களை மறைத்து ஆவதென்ன?

நாட்டில் கரோனாவின் இரண்டாவது அலை.. இல்லை இல்லை பேரலை கடுமையாக பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. மத்தியப் பிரதேச மாநிலத்திலும் கரோனா பாதிப்பு நாள்தோறும் புதிய உச்சங்களைத் தொட்டு வருகிறது.

News image
நிலைமை மோசமடைகிறது; புள்ளி விவரங்களை மறைத்து ஆவதென்ன?
Updated On :22 ஏப்ரல் 2021, 12:15 pm

DIN


போபால்: நாட்டில் கரோனாவின் இரண்டாவது அலை.. இல்லை இல்லை பேரலை கடுமையாக பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. மத்தியப் பிரதேச மாநிலத்திலும் கரோனா பாதிப்பு நாள்தோறும் புதிய உச்சங்களைத் தொட்டு வருகிறது.

ஒரு பக்கம் கரோனா பாதிப்பு கடுமையாக உயரும் அதே வேளையில், மாநில அரசு அளிக்கும் பலி எண்ணிக்கையும், சுடுகாடுகளில் எரிக்கப்படும் உடல்களின் எண்ணிக்கையும் மிகப்பெரிய அளவில் வேறுபடுகிறது.

தலைநகர் போபாலில், கரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை என்று மாநில அரசு ஒரு எண்ணிக்கையை வெளியிட்டு வருகிறது. ஆனால் எரிக்கப்படும் உடல்களின் எண்ணிக்கையும், புதைக்கப்படும் எண்ணிக்கையும் அதிலிருந்து வெகு தொலைவில் உள்ளது.

போபாலில் இருக்கும் மூன்று இடங்களில், ஏப்ரல் 16 முதல் 20 வரை 597 உடல்களுக்கு கரோனா விதிமுறைகளைப் பின்பற்றி இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டுள்ளன. ஆனால் மாநில அரசு வெளியிட்டிருக்கும் புள்ளி விவரத்தில் இதுவரை 348 பேர் கரோனாவுக்கு பலியாகியுள்ளனர் என்பது. கிட்டத்தட்ட இது பாதி அளவு குறைவாகும். ஆனால், அரசு அளிக்கும் புள்ளி விவரங்கள் தவறு என்பதை மறுக்கின்றனர் உயர் அதிகாரிகள்.

இது குறித்து போபால் மாவட்டத்தில் கரோனா தொற்றுப் பரவல் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேறகொள்ள நியமிக்கப்பட்டிருக்கும் மருத்துவக் கல்வி அமைச்சர் விஷ்வாஸ் சரங்க கூறுகையில், கரோனா பலி எண்ணிக்கையை மறைக்க வேண்டும் என்று மாநில அரசுக்கு எந்த கட்டாயமும் இல்லை, பலி எண்ணிக்கையைக் குறைத்துக் காண்பித்தால் எங்களுக்கு எந்த விருதும் கிடைக்கப்போவதில்லை என்றும் பதிலளித்துள்ளார்.

மாநிலத்தின் சுகாதாரத் துறை வெளியிட்ட புள்ளி விவரத்தில், புதன்கிழமை ஒரே நாளில் 13,107 பேர் புதிதாக கரோனா பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். ஒரே நாளில் 75 பேர் பலியாகியுள்ளனர் என்கிறது மாநில கரோனா புள்ளி விவரம்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.