மகாராஷ்டிரத்தில் கரோனா படுக்கைகள் பற்றாக்குறை காரணமாக கரோனா நோயாளிகள் தெருக்களில் உறங்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
குறிப்பாக மகாராஷ்டிரத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிகை மற்ற மாநிலங்களை விட நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இதனால் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதால், மருத்துவமனைகளில் படுக்கைகளுக்கும், இடத்திற்கும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
இதன்விளைவாக கரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் தெருக்களில் உறங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மருத்துவமனை வளாகங்களிலும் கரோனா நோயாளிகளின் ஆக்கிரமிப்பு அதிகரித்துள்ளதால், பல கரோனா நோயாளிகள் தெருக்களில் உறங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.