மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

2-வது முறை கரோனா: குணமடைந்தார் எடியூரப்பா

கர்நாடக முதல்வர் எடியூரப்பா 2-வது முறையாக கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று (ஏப்.22) அவர் குணமடைந்து வீடு திரும்பினார். 

News image

கர்நாடக முதல்வர் எடியூரப்பா (கோப்புப்படம்)

Updated On :22 ஏப்ரல் 2021, 6:42 am

கர்நாடக முதல்வர் எடியூரப்பா 2-வது முறையாக கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று (ஏப்.22) அவர் குணமடைந்து வீடு திரும்பினார். 

முதல்வர் எடியூரப்பா கடந்த 18-ம் தேதி இரண்டாவது முறையாக கரோனாவால் பாதிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து அவர் மணிப்பால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

மருத்துவர்கள் அவரது உடல்நிலையைத் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். இதனிடையே இன்று அவர் குணமடைந்து வீடு திரும்பினார்.

கடந்த மார்ச் 12-ஆம் தேதி விக்டோரியா மருத்துவமனையில் முதல்வா் எடியூரப்பா கோவேக்ஸின் முதல் தவணை தடுப்பூசியைச் செலுத்திக் கொண்டார். இரண்டாவது தவணை தடுப்பூசியை செலுத்திக்கொள்ள திட்டமிட்டிருந்த நிலையில், அவருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.