கர்நாடக முதல்வர் எடியூரப்பா 2-வது முறையாக கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று (ஏப்.22) அவர் குணமடைந்து வீடு திரும்பினார்.
முதல்வர் எடியூரப்பா கடந்த 18-ம் தேதி இரண்டாவது முறையாக கரோனாவால் பாதிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து அவர் மணிப்பால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவர்கள் அவரது உடல்நிலையைத் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். இதனிடையே இன்று அவர் குணமடைந்து வீடு திரும்பினார்.
கடந்த மார்ச் 12-ஆம் தேதி விக்டோரியா மருத்துவமனையில் முதல்வா் எடியூரப்பா கோவேக்ஸின் முதல் தவணை தடுப்பூசியைச் செலுத்திக் கொண்டார். இரண்டாவது தவணை தடுப்பூசியை செலுத்திக்கொள்ள திட்டமிட்டிருந்த நிலையில், அவருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டது.