கர்நாடகத்தில் நிலைமை கை மீறி சென்றுவிட்டது என்று அம்மாநில முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
முதல்வர் எடியூரப்பா கடந்த 18-ம் தேதி இரண்டாவது முறையாக கரோனாவால் பாதிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து அவர் மணிப்பால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் அவரது உடல்நிலையைத் தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.
இதனிடையே இன்று அவர் குணமடைந்து வீடு திரும்பினார். முதல்வர் எடியூரப்பா கூறுகையில், கர்நாடகத்தில் கரோனா பரவல் மிக மோசமாக உள்ளது. நிலைமை கை மீறி சென்றுவிட்டது. பொதுமக்களை கைகூப்பி கேட்டுக்கொள்கிறேன்.
தேவையில்லாமல் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம். ஒவ்வொரு வீட்டிலும் மூன்று முதல் நான்கு பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது கரோனாவுக்கு ஒரே தீர்வு முகக்கவசம், சானிடைசர், சமூக இடைவெளி உள்ளிட்டவையே. இதை தவிர வேறு வழியில்லை என்றார்.
இந்த நிலையில் கர்நாடகத்தில் இன்று ஒரேநாளில் 25,795 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுபற்றி கா்நாடக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மாநிலத்தில் புதிதாக ஒரேநாளில் அதிகபட்சமாக 25,795 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 12,47,997-ஆக உயா்ந்துள்ளது.
தற்போதைய நிலவரப்படி 1,96,236 சிகிச்யில் உள்ளனர். கரோனாவுக்கு இன்று மேலும் 123 பேர் பலியானார்கள். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 13,885ஆக உயர்ந்துள்ளது. கரோனாவிலிருந்து இன்று 5,624 பேர் குணமடைந்தனர். இதுவரை 10,37,857 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

2030-31க்குள் 8,000 சேவை மையங்களை அமைக்க மாருதி சுசுகி இந்தியா இலக்கு!

மியான்மரின் புதிய அதிபராக ராணுவ அரசின் தலைவர் தேர்வு!

எடப்பாடி பழனிசாமியின் 4 ஆண்டுகால ஆட்சியை மட்டும் விமர்சித்த முதல்வர் ஸ்டாலின்!

கேரளம்: அரசு மருத்துவமனையில் மருத்துவரைத் தாக்கிய 4 பெண்கள் கைது
வீடியோக்கள்

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை

Podcast | பாஜக, காங்கிரஸ் வேட்பாளர்கள் வருமா வராதா? | News & Views | E-21 |
தினமணி செய்திச் சேவை

பஞ்சாபை வீழ்த்தி முதல் வெற்றியைப் பெறுமா சிஎஸ்கே?
தினமணி செய்திச் சேவை

எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து பேச்சைத் துவங்கிய விஜய்!
இணையதளச் செய்திப் பிரிவு


