ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

ஜார்க்கண்டில் ஒரு வார பொதுமுடக்கம் இன்று முதல் தொடக்கம்

இந்தியாவில் கரோனா இரண்டாவது அலைக்கு மத்தியில் ஜார்க்கண்டில் இன்று முதல் ஒரு வார பொதுமுடக்கம் தொடங்கியுள்ளது. 

News image
Updated On :22 ஏப்ரல் 2021, 10:02 am

ANI

இந்தியாவில் கரோனா இரண்டாவது அலைக்கு மத்தியில் ஜார்க்கண்டில் இன்று முதல் ஒரு வார பொதுமுடக்கம் தொடங்கியுள்ளது. 

மாநிலத்தில் கரோனா வைரஸ் கடுமையாக அதிகரித்துள்ள நிலையில் ஸ்வஸ்த்ய சூரக்ஷா சபதம் அதாவது சுகாதார பாதுகாப்பு வாரத்தை கடைப்பிடிக்கக் கோரி அம்மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் கடந்த செவ்வாயன்று அறிவித்தார். 

அதன்படி, ஜார்க்கண்ட் மாநிலத்தில் இன்று முதல் ஏப்.29 வரை ஒரு வார பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், அத்தியாவசிய பொருள்கள், வேளாண்மை, கட்டுமானம், சுரங்க மற்றும் தொழில்துறை ஆகியவற்றுக்கு மட்டும் விலக்கு அளித்துள்ளது. 

மாநில அரசின் உத்தரவுப்படி, அத்தியாவசிய சேவைகளைத் தவிர அனைத்து கடைகளும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. பக்தர்கள் ஒன்றுகூடாமல் வழிபாட்டுத் தலங்களில் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

ஜார்க்கண்டில் புதன்கிழமை நிலவரப்படி புதிதாக 5,041 பேருக்குத் தொற்று பதிவாகியுள்ள நிலையில் 62 பேர் இறந்துள்ளனர் என்று மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.