சென்னையில் காங்கிரஸ் கமிட்டி கூட்டம்: போட்டியிடும் தொகுதிகள் குறித்து ஆலோசனைஈரோடு மாவட்டம் கொடுமுடியில் கே.பி.சுந்தராம்பாள் சிலையை முதல்வர் திறந்துவைத்தார்ஈரானை உலுக்கும் தாக்குதல்கள்: பலி 1,300-ஐ கடந்தது!பெண்கள் முன்னேற்றத்துக்கு அரசு துணை நிற்கிறது: முதல்வர் ஸ்டாலின் மகளிர் நாள் வாழ்த்துமாமல்லபுரத்தில் சுற்றுலாத் தலங்களை மக்கள் இன்று கட்டணமின்றி பார்வையிட அனுமதிமார்ச் முதல் வாரத்தில் வளைகுடா நாடுகளிலிருந்து 52,000 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்: மத்திய அரசுசமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் பூச்சொரிதல் விழா தொடங்கியதுகுடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மகளிர் நாள் வாழ்த்து!பஹ்ரைன் துறைமுகத்தில் ஈரான் தாக்குதல்!டி20 உலகக் கோப்பை பட்டத்தை தக்க வைக்குமா இந்தியா? நியூஸிலாந்துடன் இன்று இறுதி ஆட்டம்!டிரம்ப்பைக் கொல்ல சதி: பாகிஸ்தானியா் குற்றவாளி எனத் தீா்ப்புரஷியாவின் புதிய கச்சா எண்ணெய்க்கும் தடையை விலக்க வாய்ப்பு: அமெரிக்கா
/

வாலாஜாபேட்டையில் 98 வயது மூதாட்டி கருப்புக் கொடி ஏந்தி போராட்டம்

வாலாஜாபேட்டையில் 20 ஆண்டுகளாக வங்கியில் பணியாற்றிய ஆணையை வழங்காமல் அலைக்கழிக்கும் வங்கி நிர்வாகத்தைக் கண்டித்து ராணுவ வீரரின் 98 வயது மனைவி கருப்புக் கொடி ஏந்தியவாறு வங்கி முன் போராட்டம்.

News image
வாலாஜாபேட்டையில் 98 வயது மூதாட்டி கருப்புக் கொடி ஏந்தி போராட்டம்
Updated On :23 ஏப்ரல் 2021, 9:33 am

DIN

வாலாஜாபேட்டையில் 20 ஆண்டுகளாக வங்கியில் பணியாற்றிய ஆணையை வழங்காமல் அலைக்கழிக்கும் வங்கி நிர்வாகத்தைக் கண்டித்து ராணுவ வீரரின் 98 வயது மனைவி கருப்புக் கொடி ஏந்தியவாறு வங்கி முன் போராட்டம்.

ராணிப்பேட்டை மாவட்டம் ஆம்பூர் மேட்டு தெருவைச் சேர்ந்தவர் லேட் தேவராஜ். ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற இவர், 2-ம் உலகப்போரில் பங்கேற்றவர். இவர் கடந்த 1950ல் வாலாஜாப்பேட்டையில் உள்ள பொதுத்துறை வங்கியில் பாதுகாவலராக பணியில் சேர்ந்த நிலையில் 18 ஆண்டுகள் கழித்து 1968ல் உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளார். 

இந்த நிலையில் உயிரிழந்த ராணுவ வீரரான தேவராஜின் குடும்பத்திற்கு வங்கியின் சார்பில் குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும் எனக்கூறி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து தற்போது வரையில் அந்த வழக்கு நிலுவையில் உள்ளது. ஆனால் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக தேவராஜின் மனைவியான சின்னம்மாள், தனது கணவர் வங்கியில் பணியாற்றியதற்கான சர்வீஸ் ஆர்டரை கேட்டு போராடி வரும் நிலையில், வங்கி நிர்வாகம் அதனை வழங்காமல் அலைக்கழித்து வருவதாக கூறப்படுகிறது. 

இதனால் ஆத்திரமடைந்த 98 வயதான சின்னம்மாள், தான் கணவர் பணியாற்றுவதற்கான ஆணையை வழங்க வேண்டும் என கோரி வாலாஜாபேட்டையில் உள்ள ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியின் முன்பாக வங்கி நிர்வாகத்தைக் கண்டித்து கைகளில் கருப்பு கொடிகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டார். 98 வயது மூதாட்டியான அவர் வங்கி முன்பு கருப்புக் கொடியை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் காண்போரிடையே சோகத்தை ஏற்படுத்தியது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.