ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

கொல்கத்தாவில் சட்டவிரோத தொழிற்சாலையில் குண்டு வெடிப்பு: 11 பேர் காயம்

மேற்கு வங்கத்தின் தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள ஒரு தொழிற்சாலையில் இன்று காலை ஏற்பட்ட குண்டுவெடிப்பில் 11 பேர் காயமடைந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர். 

News image
கொல்கத்தாவில் சட்டவிரோத தொழிற்சாலையில் குண்டு வெடிப்பு: 11 பேர் காயம்
Updated On :24 ஏப்ரல் 2021, 6:40 am

DIN

மேற்கு வங்கத்தின் தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள ஒரு தொழிற்சாலையில் இன்று காலை ஏற்பட்ட குண்டுவெடிப்பில் 11 பேர் காயமடைந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர். 

கொல்கத்தாவிலிருந்து 20 கி.மீ தூரத்தில் உள்ள பங்கூர் காவல் நிலைய பகுதியில் உள்ள மலாஞ்சா-பத்மபுகூரில் ஒரு சட்டவிரோத தோல் தொழிற்சாலையில் இன்று காலை 7.30 மணிக்கு இந்த வெடி விபத்து சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

காயமடைந்தவர்களில் 3 பேர் மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 
மற்றவர்கள் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் 

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து தொழிற்சாலை சீல் வைக்கப்பட்டுள்ளது. குண்டுவெடிப்புக்கான சரியான காரணத்தை அறிய மேலும் அப்பகுதியில் அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.