ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

தில்லியில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் 20 பேர் பலி; 200 பேரின் உயிருக்கு ஆபத்து

புது தில்லியில் உள்ள ஜெய்ப்பூர் கோல்டன் மருத்துவமனையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் 20 பேர் பலியானதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

News image
தில்லி ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் 20 பேர் பலி; 200 பேரின் உயிருக்கு ஆபத்து
Updated On :24 ஏப்ரல் 2021, 5:36 am

DIN


புது தில்லி: புது தில்லியில் உள்ள ஜெய்ப்பூர் கோல்டன் மருத்துவமனையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் 20 பேர் பலியானதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஜெய்ப்பூர் கோல்டன் மருத்துவமனை மருத்துவர் பலுஜா கூறுகையில், ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் நேற்று இரவு 20 நோயாளிகள் உயிரிழந்துவிட்டனர். தற்போதிருக்கும் ஆக்ஸிஜனும் வெறும் அரை மணி நேரத்துக்கு மட்டுமே போதுமானது. இதனால், சிகிச்சையிலிருக்கும் 200 நோயாளிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.

தில்லியில் உள்ள மற்றொரு மருத்துவமனையான பத்ரா மருத்துவமனை எம்.டி. மருத்துவர் எஸ்சிஎல் குப்தா கூறுகையில், எங்கள் மருத்துவமனைக்கு நாள் ஒன்றுக்கு 8000 லிட்டர் ஆக்ஸிஜன் தேவைப்படுகிறது. ஆனால் வெறும் 500 லிட்டர் ஆக்ஸிஜன்தான் கிடைக்கப்பெற்றுள்ளது. எங்கள் மருத்துவமனையில் 350 நோயாளிகள் சிகிச்சையில் உள்ளனர். கரோனா நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் உதவியோடு சிகிச்சை அளிக்கப்பட வேண்டும். ஆனால், எங்களுக்கு தேவையான அளவுக்கு ஆக்ஸிஜன் கிடைக்கவில்லை. என்ன செய்வது என்று தெரியவில்லை எனத் தெரிவித்துள்ளார்.

எங்களிடம் போதிய ஆக்ஸிஜன் இல்லாததால் மருத்துவமனையில் நோயாளிகளை அனுமதிப்பதை நிறுத்திவிட்டோம். சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளையும் மருத்துவமனையில் இருந்து வெளியேற்றி வருகிறோம் என்று சரோஜ் மருத்துவமனை தரப்பில் கூறப்பட்டுள்ளது.

தில்லியில் உள்ள சா் கங்காராம் மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் நேற்று 25 கரோனா நோயாளிகள் உயிரிழந்த நிலையில், இன்று மற்றொரு தனியார் மருத்துவமனையில் 20 நோயாளிகள் உயிரிழந்துள்ளனர்.

நோயாளிகளுக்குத் தேவையான அளவை விட குறைந்த அழுத்தத்தில் ஆக்சிஜன் கிடைத்ததே இதற்குக் காரணம் என்று சொல்லப்படுகிறது. மற்றொரு தகவல் அனைவரும் ஆக்சிஜன் பிரச்னையால் உயிரிழக்கவில்லை, சில நோயாளிகள் பலவீனமாக இருந்ததால் இறந்துவிட்டதாக தெரிவிக்கின்றன. கங்காரம் மருத்துவமனையில் ஓரளவு ஆக்சிஜன் கையிருப்பில் இருந்தது. ஆக்சிஜன் ஏற்றி வந்த டேங்கா் லாரியும் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

கங்காராம் மருத்துவமனையில் 500-க்கும் மேலான கரோனா நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா். அவா்களில் 150 நோயாளிகளுக்கு அதிக அளவு ஆக்சிஜன் தேவைப்படுகிறது. வென்டிலேட்டா்கள், பிஐபிஏபி கருவிகளும் சரிவர வேலை செய்யவில்லை. இதனால், மேலும் 60 நோயாளிகளின் நிலை கவலைக்குரியதாக உள்ளது என்று மருத்துவமனையின் மூத்த அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். தீவிர சிகிச்சைப் பிரிவிலும், அவசர சிகிச்சைப் பிரிவிலும் மாற்று ஏற்பாடு மூலம் சுவாசக் கருவிகள் செயல்பட நிா்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது என்று அந்த அதிகாரி மேலும் கூறினாா்.

கடந்த ஐந்து நாள்களாகவே தில்லியில் உள்ள பல தனியாா் மருத்துவமனைகள் ஆக்சிஜன் சப்ளை கிடைக்காமல் தவித்து வந்தன. சில மருத்துவமனைகள் தங்களிடம் உள்ள நோயாளிகளை கரோனா மருத்துவ மையங்களுக்கு மாற்றுமாறும் தில்லி அரசிடம் கேட்டுக் கொண்டிருந்தன. சில மருத்துவமனைகள் மாற்று ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்தாலும், ஆக்சிஜன் பற்றாக்குறை நெருக்கடி தீரவில்லை என்று அரசு அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

தில்லியில் உள்ள 6 தனியாா் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறை இருப்பதாகவும், இந்தப் பிரச்னைக்குத் தீா்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் ஹா்ஷ் வா்தனுக்கு தில்லி துணை முதல்வா் மணீஷ் சிசோடியா அவசர கடிதம் எழுதியிருந்தாா். ஆக்சிஜன் பிரச்னைக்குத் தீா்வு கண்டால்தான் தில்லியில் கரோனா படுக்கைகளை அதிகரிக்க இயலும் என்று தில்லி சுகாதாரத் அமைச்சா் சத்யேந்தா் ஜெயினும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.