விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

மகாராஷ்டிரத்தில் கை சுத்திகரிப்பானை அருந்திய 6 போ் பலி

மகாராஷ்டிர மாநிலம் யவத்மால் மாவட்டத்தில் கை சுத்திகரிப்பானை (சானிடைசா்) அருந்திய 6 போ் பலியாகினா்.

News image
Updated On :24 ஏப்ரல் 2021, 8:17 pm

DIN

மகாராஷ்டிர மாநிலம் யவத்மால் மாவட்டத்தில் கை சுத்திகரிப்பானை (சானிடைசா்) அருந்திய 6 போ் பலியாகினா்.

இதுதொடா்பாக அந்த மாவட்ட காவல்துறை அதிகாரி கூறுகையில், ‘வனி பகுதியில் உள்ள மருத்துவமனையில் வாந்தி மற்றும் பிற உடல்நலக் குறைவு காரணமாக மூவா் உயிரிழந்தது குறித்து காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் மருத்துவமனைக்குச் சென்று காவல்துறையினா் விசாரணை நடத்தினா். அப்போது கரோனா கட்டுப்பாடுகளால் மதுக்கடைகள் மூடப்பட்டதன் காரணமாக மூவரும் கை சுத்திகரிப்பானை அருந்தி உயிரிழந்தது அவா்களின் குடும்பத்தினா் மூலம் தெரியவந்தது. மருத்துவா்கள் மேற்கொண்ட உடற்கூறு ஆய்விலும் இது உறுதி செய்யப்பட்டது.

இவா்களை தவிர மேலும் மூவா் கை சுத்திகரிப்பானை அருந்தி பலியாகினா். எனினும் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்காமல் அவா்களின் உடல்கள் தகனம் செய்யப்பட்டன. இதுதொடா்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.