காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு? பாஜக வேட்பாளர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்! அண்ணாமலைபாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு! அண்ணாமலை பெயர் இல்லைகடும் வெய்யில் வாட்டுவது ஏன்? வானிலை நிபுணர்கள் சொல்வது என்ன?மகிழ்ச்சியான செய்தி! சென்னையில் புதிய கலை, அறிவியல் கல்லூரிகள்!தவெக தலைவர் விஜய் பிரசாரத்துக்கு இப்படியும் ஒரு சோதனையா?சென்னை புறநகர் ரயில் சேவை சீரானது! பழைய அட்டவணைப்படி இயக்கம்!பிரதமா் மோடி இன்று வருகை: புதுச்சேரியில் போக்குவரத்து மாற்றம்பிரதமா் நரேந்திர மோடி இன்று சென்னை வருகைதென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஏப்ரல் 4 வரை மழைக்கு வாய்ப்பு
/

மகாராஷ்டிரத்தில் புதிய உச்சம்: ஒரேநாளில் கரோனாவுக்கு 832 பேர் பலி

மகாராஷ்டிரத்தில் புதிய உச்சமாக ஒரேநாளில் கரோனாவுக்கு 832 பேர் பலியாகியுள்ளனர். 

News image
Updated On :25 ஏப்ரல் 2021, 4:39 pm

DIN

மகாராஷ்டிரத்தில் புதிய உச்சமாக ஒரேநாளில் கரோனாவுக்கு 832 பேர் பலியாகியுள்ளனர்.

இதுகுறித்து அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில், கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 66,191 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 
தற்போதைய நிலவரப்படி 6,98,354 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

கரோனாவிலிருந்து இன்று 61,450 பேர் மீண்டனர். இதுவரை 35,30,060 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதேசமயம் கரோனாவுக்கு ஒரேநாளில் 832 பேர் பலியாகியுள்ளனர். இதையடுத்து மொத்த பலி எண்ணிக்கை 64,760ஆக உயர்ந்துள்ளது. 

தலைநகர் மும்பையை பொறுத்தவரை 5,542 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 42,36,825 பேர் வீட்டுக் கண்காணிப்பில் உள்ளனர். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.