மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி முகாம்!விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
/

ஹிமாசலில் ஏப்.27 முதல் 4 மாவட்டங்களில் இரவு ஊரடங்கு

ஹிமாசலில் ஏப்.27 முதல் 4 மாவட்டங்களில் இரவு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

News image

கோப்புப்படம்.

Updated On :25 ஏப்ரல் 2021, 11:36 am

ஹிமாசலில் ஏப்.27 முதல் 4 மாவட்டங்களில் இரவு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடுமுழுவதும் கரோனா வைரஸ் பரவலின் 2ஆவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனால் பல்வேறு மாநிலங்களில் கடும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் ஹிமாசலில் கரோனா தொடர்பான ஆலோசனைக்கூட்டம் அம்மாநில முதல்வர் ஜெய் ராம் தாகூர் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் கரோனா பரவல் அதிகமுள்ள கன்கரா, உனா, சோலன் மற்றும் சிர்மோர் ஆகிய 4 மாவட்டங்களில் ஏப்.26 முதல் மே 10ஆம் தேதி வரை இரவு ஊரடங்கு அமல்படுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. 

இதன்படி தினமும் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.