மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

சூரத் மருத்துவமனை தீ விபத்தில் கரோனா நோயாளிகள் 4 பேர் பலி

சூரத் மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை இரவு ஏற்பட்ட தீ விபத்தில் நான்கு கரோனா நோயாளிகள் உயிரிழந்தனர்.

News image
தீ விபத்துக்குள்ளான சூரத் மருத்துவமனை
Updated On :26 ஏப்ரல் 2021, 12:50 pm

DIN

சூரத் மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை இரவு ஏற்பட்ட தீ விபத்தில் நான்கு கரோனா நோயாளிகள் உயிரிழந்தனர்.

குஜராத் மாநிலம் சூரத்தில் உள்ள ஆயுஷ் மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை இரவு தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து அங்குள்ள நோயாளிகளை ஸ்மிம்மர் மருத்துவமனைக்கு மாற்றும் பணிகள் நடைபெற்றன. எனினும் இந்த விபத்தில் நான்கு கரோனா நோயாளிகள் உயிரிழந்தனர். 

Story image

சூரத் மாநகராட்சியின் சுகாதார மருத்துவ அதிகாரி டாக்டர் ஆஷிஷ் நாயக் இத்தகவலை உறுதி செய்துள்ளார். 

தீ விபத்து ஏற்பட்ட நேரத்தில் மருத்துவமனையின் ஐந்தாவது தளத்தில் 10 கரோனா நோயாளிகள் இருந்ததாக அவர் தெரிவித்தார். மேலும் விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. 

கடந்த வாரம் மகாராஷ்டிர மாநிலம் பல்காரில் கரோனா சிகிச்சை மையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 15 நோயாளிகள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.