காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு? பாஜக வேட்பாளர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்! அண்ணாமலைபாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு! அண்ணாமலை பெயர் இல்லைகடும் வெய்யில் வாட்டுவது ஏன்? வானிலை நிபுணர்கள் சொல்வது என்ன?மகிழ்ச்சியான செய்தி! சென்னையில் புதிய கலை, அறிவியல் கல்லூரிகள்!தவெக தலைவர் விஜய் பிரசாரத்துக்கு இப்படியும் ஒரு சோதனையா?சென்னை புறநகர் ரயில் சேவை சீரானது! பழைய அட்டவணைப்படி இயக்கம்!பிரதமா் மோடி இன்று வருகை: புதுச்சேரியில் போக்குவரத்து மாற்றம்பிரதமா் நரேந்திர மோடி இன்று சென்னை வருகைதென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஏப்ரல் 4 வரை மழைக்கு வாய்ப்பு
/

உச்சநீதிமன்ற வளாகத்தில் கரோனா சிகிச்சைக்கு அனுமதி

உச்சநீதிமன்ற வளாகத்தில் படுக்கை வசதிகள், பரிசோதனைகள் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

News image
Updated On :26 ஏப்ரல் 2021, 10:20 am

DIN

உச்சநீதிமன்ற வளாகத்தில் படுக்கை வசதிகள், பரிசோதனைகள் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

தலைநகர் தில்லியில் கரோனா இரண்டாம் அலை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. பல்வேறு மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள், ஆக்சிஜன் தட்டுப்பாடு என பல பிரச்னைகளை தில்லி எதிர்கொண்டு வருகிறது.

இந்நிலையில் கரோனா இரண்டாம் அலை பரவலை சமாளிக்க உச்சநீதிமன்ற வளாகத்தில் கரோனா சிகிச்சைக்கு ஏற்பாடு செய்ய உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. 

உச்சநீதிமன்ற வளாகத்தில் படுக்கை வசதிகள், கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ள தலைமை நீதிபதி என்.வி.ரமணா அனுமதி அளித்துள்ளார். 

வருகிற மே 7 ஆம் தேதியிலிருந்து உச்ச நீதிமன்றத்துக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. எனவே, இந்த விடுமுறை காலத்தில் உச்சநீதிமன்ற வளாகத்தில் கரோனா சிகிச்சை பணிகளை மேற்கொள்ளலாம் என மற்ற நீதிபதிகளுடன் கலந்தாலோசித்த பிறகு தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.