தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

உத்தரகண்டில் அனைவருக்கும் இலவசத் தடுப்பூசி: ரூ.400 கோடி ஒதுக்கீடு

உத்தரகண்ட் மாநிலத்தில் அனைவருக்கும் இலவசமாக கரோனா தடுப்பூசி வழங்கப்படும் என்று முதல்வர் தீரத் சிங் ராவத் தெரிவித்துள்ளார்.

News image

முதல்வர் தீரத் சிங் ராவத் (கோப்புப்படம்)

Updated On :28 ஏப்ரல் 2021, 9:48 am

DIN

உத்தரகண்ட் மாநிலத்தில் அனைவருக்கும் இலவசமாக கரோனா தடுப்பூசி வழங்கப்படும் என்று முதல்வர் தீரத் சிங் ராவத் தெரிவித்துள்ளார்.

இதற்காக ரூ.400 கோடியை ஒதுக்கீடு செய்து அவர் உத்தரவிட்டுள்ளார்.

நாடு முழுவதும் கரோனா தொற்று பரவி வருகிறது. அந்தவகையில் உத்தரகண்டிலும் தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 

கரோனாவைக் கட்டுப்படுத்த மத்திய அரசுடன் இணைந்து மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. கரோனா பரவாமல் தடுக்கும் வகையில் மே 1-ம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் கரோனா தடுப்பூசி போடப்படவுள்ளது.

இந்நிலையில் உத்தரகண்ட் அனைவருக்கும் இலவசமாக கரோனா தடுப்பூசி வழங்கப்படும் என்று முதல்வர் தீரத் சிங் ராவத் தெரிவித்துள்ளார். 

மேலும், இதற்காக ரூ.400 கோடியை ஒதுக்கீடு செய்து அவர் உத்தரவிட்டுள்ளார். மேலும், ஹைதராபாத்திற்கு 7,500 ரெம்டெசிவிர் மருந்துகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.