மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 3.79 லட்சம் பேருக்கு கரோனா: 3,645 பேர் பலி

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின்எண்ணிக்கை 3,79,257 -ஆக அதிகரித்துள்ளது.

News image
Updated On :29 ஏப்ரல் 2021, 4:59 am

DIN


நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின்எண்ணிக்கை 3,79,257 -ஆக அதிகரித்துள்ளதையடுத்து, இதுவரை இந்நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 1,83,76,524 ஆக உயா்ந்துள்ளதாகவும், கடந்த ஆண்டு தொற்றுநோய் பரவல் தொடங்கியதிலிருந்து இது மிக உயர்ந்த ஒரு நாள் பாதிப்பாகும் என்று மத்திய சுகாதார அமைச்சகம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த அமைச்சகம் சாா்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

நாடு முழுவதும் ஒரேநாளில் 3,79,257 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஒரேநாளில் 3,645 போ் உயிரிழந்து விட்டனா். இதையடுத்து புதிதாக கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 4 ஆயிரத்து 832 ஆக அதிகரித்துள்ளது. 

வியாழக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி, கரோனா தாக்கத்திலிருந்து குணமடைந்தவா்களின் எண்ணிக்கை 1,50,86,878 ஆகும், அதே சமயம் இறப்பு விகிதம் 1.12 சதவீதமாக உள்ளது.

புதிதாக கரோனா பாதிப்பினால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 16.55 சதவீதமாக அதிகரித்துள்ளதன் மூலம் தற்போது சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 30,84,814 -ஆக உயா்ந்துள்ளன. தேசிய அளவில் 2,69,507 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதையடுத்து தேசிய அளவில் குணமடைந்தோரின் எண்ணிக்கை 1,50,86,878  ஆக உள்ளது. கரோனா பாதிப்பால் குணமடைந்துள்ளவா்களின் எண்ணிக்கை 82.33 சதவீதமாக உள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் இதுவரை 15,00,20,648 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் (ஐசிஎம்ஆா்) தரவுகளின்படி, ஏப்ரல் 28-ஆம் தேதி வரை 28,44,71,979 பேருக்கு கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. புதன்கிழமை ஒரேநாளில் 17,68,190 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டன.

நாடு முழுவதும் இதுவரை உயிரிழந்தவா்களில் மகாராஷ்டிரம், தில்லி உத்தர பிரதேசம், சத்தீஸ்கர், கா்நாடகம் குஜராத், ஜாா்கண்ட், ராஜஸ்தான், பஞ்சாப் மாநிலங்களை சேர்ந்தவர்களே என்று தெரிவிக்கப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.