பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

கரோனா சிகிச்சை பற்றாக்குறையால் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்: ராகுல் காந்தி

கரோனா சிகிச்சை பற்றாக்குறையால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர்  அனைவருக்கும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார். 

News image
கோப்புப்படம்
Updated On :30 ஏப்ரல் 2021, 7:20 am

DIN

கரோனா சிகிச்சை பற்றாக்குறையால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர்  அனைவருக்கும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார். 

நாட்டில் கரோனா தொற்றுநோய் பரவலுக்கு மத்தியில் சிகிச்சை பற்றாக்குறை காரணமாக நாடு முழுவதும் உயிரிழப்பு ஏற்பட்டு வருகிறது. 

இந்நிலையில் கரோனா சிகிச்சை பற்றாக்குறையால் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பத்தினர் அனைவருக்கும் இரங்கல் தெரிவிப்பதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். 

மேலும், இந்த துயரத்தில் நீங்கள் மட்டும் இல்லை. நாட்டின் ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் பிரார்த்தனைகளும் அனுதாபங்களும் உங்களுடன் இருக்கின்றன என்று தெரிவித்துள்ளார். 

நாடு முழுவதும் கரோனாவுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 3,86,452 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்தம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1.87 கோடியாக உயர்ந்துள்ளது.

மேலும் 3,498 பேர் கரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதுவரை மொத்தம் 2,08,330 பேர் இறந்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.