மத்தியப் பிரதேசத்தின் ஜபல்பூரில் டிராக்டர் தலைகீழாக கவிழ்ந்ததில் 2 பேர் பலியாகினர். 11 பேர் காயமடைந்தனர்.
ஜபல்பூர் மாவட்ட தலைமையகத்திலிருந்து 50 கி.மீ தூரத்தில் உள்ள குகாரா கிராமத்திற்கு அருகே இந்த விபத்து நடந்ததாக குண்டம் காவல் நிலைய ஆய்வாளர் பி.கே.மர்கம் தெரிவித்தார்.
விபத்தில் சஞ்சு மராவி (13) மற்றும் ஆம் சிங் துர்வே (26) ஆகியோர் உயிரிழந்துள்ளனர். மேலும் 11 பேர் காயமடைந்தனர்.
முன்னதாக வியாழக்கிழமை பனகர் தெஹ்ஸில் கிராமத்தில் நடைபெற்ற திருமண விழாவில் கலந்துகொண்ட 25க்கும் மேற்பட்டோர் டிராக்டரில் குண்டம் நகரில் உள்ள தனது சொந்த ஊருக்கு திரும்பியபோது இந்த விபத்து நடைபெற்றது.
முதல்கட்ட விசாரணையில் டிராக்டர் ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்ததால் கவிழ்ந்துள்ளதாக காவல்துறை அதிகாரி தெரிவித்தார்.
காயமடைந்தவர்கள் குண்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
மேற்கு வங்கம்: திரிணமூல் தொண்டா் வீட்டில் 73 நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல்! என்ஐஏ விசாரணை!!

தொழில்நுட்பத்தை எதிர்கொள்வோம்!
பொறுப்பால் உயரும் பெருமை!

சென்னையில் சொத்து வரி செலுத்தாத 2 லட்சம் பேருக்கு விளக்க நோட்டீஸ்! தோ்தலுக்குப் பின் தீவிர நடவடிக்கை!
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


