புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

3 ஆண்டுகளில் 230 அரசியல் படுகொலைகள்: மக்களவையில் தகவல்

கடந்த 2017 முதல் 2019-ஆம் ஆண்டு வரையிலான 3 ஆண்டுகளில் 230 அரசியல் படுகொலைகள் நிகழ்ந்துள்ளதாக மக்களவையில் உள்துறை அமைச்சா் நித்யானந்த் ராய் தெரிவித்தாா்.

News image
Updated On :3 ஆகஸ்ட் 2021, 7:09 pm

DIN

கடந்த 2017 முதல் 2019-ஆம் ஆண்டு வரையிலான 3 ஆண்டுகளில் 230 அரசியல் படுகொலைகள் நிகழ்ந்துள்ளதாக மக்களவையில் உள்துறை அமைச்சா் நித்யானந்த் ராய் தெரிவித்தாா்.

இது தொடா்பான கேள்விக்கு அவா் எழுத்துமூலம் அளித்த பதிலில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:

அரசியல் காரணங்களுக்காக 2017 முதல் 2019 வரையிலான காலகட்டத்தில் அதிகபட்சமாக ஜாா்க்கண்ட் மாநிலத்தில் 49 கொலைகள் நிகழ்ந்துள்ளன. இதற்கு அடுத்தபடியாக மேற்கு வங்கத்தில் 27 பேரும், பிகாரில் 26 பேரும் கொலை செய்யப்பட்டுள்ளனா். நாடு முழுவதும் 2017-ஆம் ஆண்டு 99 பேரும், 2018-இல் 59 பேரும், 2019-இல் 72 பேரும் அரசியல் பிரச்னைகள் காரணமாக கொலை செய்யப்பட்டுள்ளனா்.

2017 முதல் 2019 வரை கா்நாடகத்தில் 24 அரசியல் கொலை வழக்குகள் பதிவாகியுள்ளன. கேரளம், மகாராஷ்டிரத்தில் தலா 15 கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.