தமிழகத்தில் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்: சென்னையில் முதல்வா் விஜய் தொடங்கி வைக்கிறாா்!இன்றும் நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்பு!ஓராண்டில் 229 சிறப்பு ரயில்களை இயக்கி தெற்கு ரயில்வே சாதனை7 - 9 ஆம் வகுப்பு மாணவா்களுக்கு மும்மொழிக் கொள்கை பொருந்தாது: சிபிஎஸ்இமது இல்லாத நகராட்சியாக மாறியது அரக்கோணம் நகராட்சி! முதல்வர் விஜய்க்கு மக்கள் பாராட்டு!
/

பெட்ரோல் உயர்வு: நாடாளுமன்றத்திற்கு சைக்கிளில் சென்ற ராகுல்

நாடாளுமன்ற கூட்டத்திற்கு எதிர்க்கட்சி உறுப்பினர்களுடன் ராகுல் காந்தி இன்று சைக்கிளில் சென்றதால் பரபரப்பு நிலவியது.

News image

நாடாளுமன்றத்திற்கு சைக்கிளில் சென்ற ராகுல்

Updated On :3 ஆகஸ்ட் 2021, 12:01 pm IST

நாடாளுமன்ற கூட்டத்திற்கு எதிர்க்கட்சி உறுப்பினர்களுடன் ராகுல் காந்தி இன்று சைக்கிளில் சென்றதால் பரபரப்பு நிலவியது.

எதிர்க்கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்களுடன் இன்று காலை ஆலோசனையில் ஈடுபட்ட ராகுல் காந்தி, பெட்ரோல், கேஸ் விலை உயர்வை கண்டித்து நாடாளுமன்ற கூட்டத்தொடருக்கு சைக்கிளில் சென்றார். அவருடன் எதிர்க்கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்களும் சைக்கிளில் சென்றனர்.

நாடாளுமன்றக் குளிர்கால கூட்டத்தொடர் ஜூலை 19இல் தொடங்கி நடைபெற்று வருகின்றது. ஆகஸ்ட் 13 வரை நடைபெறவுள்ள இந்த கூட்டத்தில் பெகாஸஸ் விவகாரத்தை அவைகளில் விவாதிக்க வேண்டுமென தொடர்ந்து 10வது நாள்களாக எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Story image

இந்நிலையில், மக்களவை மற்றும் மாநிலங்களவையில் உள்ள எதிர்க்கட்சி உறுப்பினர்களுடன் ஆலோசனை செய்ய காலை உணவுக்கு காங்கிரஸின் ராகுல் காந்தி அழைப்பு விடுத்திருந்தார். இதில், பெரும்பாலான எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.