நாடாளுமன்ற கூட்டத்திற்கு எதிர்க்கட்சி உறுப்பினர்களுடன் ராகுல் காந்தி இன்று சைக்கிளில் சென்றதால் பரபரப்பு நிலவியது.
எதிர்க்கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்களுடன் இன்று காலை ஆலோசனையில் ஈடுபட்ட ராகுல் காந்தி, பெட்ரோல், கேஸ் விலை உயர்வை கண்டித்து நாடாளுமன்ற கூட்டத்தொடருக்கு சைக்கிளில் சென்றார். அவருடன் எதிர்க்கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்களும் சைக்கிளில் சென்றனர்.
நாடாளுமன்றக் குளிர்கால கூட்டத்தொடர் ஜூலை 19இல் தொடங்கி நடைபெற்று வருகின்றது. ஆகஸ்ட் 13 வரை நடைபெறவுள்ள இந்த கூட்டத்தில் பெகாஸஸ் விவகாரத்தை அவைகளில் விவாதிக்க வேண்டுமென தொடர்ந்து 10வது நாள்களாக எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், மக்களவை மற்றும் மாநிலங்களவையில் உள்ள எதிர்க்கட்சி உறுப்பினர்களுடன் ஆலோசனை செய்ய காலை உணவுக்கு காங்கிரஸின் ராகுல் காந்தி அழைப்பு விடுத்திருந்தார். இதில், பெரும்பாலான எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பங்கேற்றனர்.