மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பேச்சுவார்த்தை மூலம் தீர்வு: அசாம் - மிசோரம் கூட்டறிக்கை

மத்திய உள்துறை அமைச்சகம் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்ட நிலையில் அசாம் - மிசோரம் மாநில அரசுகள் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர்.

News image
கோப்புப்படம்
Updated On :5 ஆகஸ்ட் 2021, 9:15 am

DIN

மத்திய உள்துறை அமைச்சகம் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்ட நிலையில் அசாம் - மிசோரம் மாநில அரசுகள் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர்.

எல்லைப் பிரச்னை தொடர்பாக அசாம், மிசோரம் மாநில காவல்துறையினருக்கிடையே நிகழ்ந்த துப்பாக்கிச்சூட்டால், கடந்த ஜூலை 26ஆம் தேதி அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ஆறு காவலர்கள் கொல்லப்பட்டனர். மேலும் இரு மாநிலங்களை சேர்ந்த காவலர்கள், பொதுமக்கள் என பலர் காயமடைந்தனர்.

இந்த பிரச்னையில் தலையிட்ட மத்திய உள்துறை அமைச்சகம் இரு மாநில முதல்வர்கள் மற்றும் அதிகாரிகளுடன் பல கட்டப் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், உடன்பாடு எட்டப்பட்டதாக இரு மாநில அரசுகளும் இன்று கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர்.

அறிக்கையில், “மத்திய உள்துறை அமைச்சகத்தின் பேச்சுவார்த்தை முயற்சியை இரு மாநில அரசுகள் வரவேற்கின்றன. மாநில எல்லைகளில் நிலவும் பதற்றத்தை போக்க அசாம் மற்றும் மிசோரம் மாநில முதல்வர்களுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.

கடந்த ஜூலை 26-ம் தேதி பலியானவர்களுக்கு மிசோரம் மாநிலம் தரப்பில் இரங்கல் தெரிவிக்கப்படுகிறது. மேலும், காயமடைந்தவர்கள் விரைவில் நலம்பெற வாழ்த்து தெரிவிக்கப்படுகிறது.

மாநில எல்லைகளில் உள்ள பதற்றத்தை தணிக்க மத்திய அரசின் பாதுகாப்புப் படைகளை பணியமர்த்த இரு மாநிலங்களும் வரவேற்கின்றன. மேலும், மாநிலங்களின் காவல்துறை மற்றும் வனத்துறை அதிகாரிகளை எல்லைகளில் பணியமர்த்தப்படாது என முடிவெடுக்கப்பட்டுள்ளது.

மாநில எல்லைகளில் வசிக்கும் மக்களின் மத்தியில் அமைதி திரும்ப தேவையான நடவடிக்கைகளை இரு மாநில அரசுகளும் எடுக்கும்” என தெரிவித்துள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.