நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர்கள் நாளை(ஆக.6) ஆலோசனை

பெகாஸஸ் உள்ளிட்ட பிரச்னைகள் தொடர்பாக நாடாளுமன்ற எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்தவுள்ளனர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

பெகாஸஸ் உள்ளிட்ட பிரச்னைகள் தொடர்பாக நாடாளுமன்ற எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்தவுள்ளனர்.

நாடாளுமன்றக் குளிர்கால கூட்டத்தொடர் ஜூலை 19இல் தொடங்கி நடைபெற்று வருகின்றது. ஆகஸ்ட் 13 வரை நடைபெறவுள்ள இந்த கூட்டத்தில் பெகாஸஸ் விவகாரத்தை அவைகளில் விவாதிக்க வேண்டுமென தொடர்ந்து 13வது நாளாக எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், அடுத்த 5 நாள்கள் நாடாளுமன்றத்தில் எழுப்ப வேண்டிய பிரச்னைகள் தொடர்பாக மக்களவை மற்றும் மாநிலங்களவையில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர்கள் நாளை காலை 10 மணிக்கு ஆலோசனையில் ஈடுபடவுள்ளனர்.

மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிக்கார்ஜுன கார்கே அலுவலகத்தில் நடைபெறும் ஆலோசனையில் ராகுல் காந்தியும் பங்கேற்கவுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com