மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

நகைப் பறிப்பில் ஈடுபட்ட  2 ராணுவ வீரர்கள் கைது 

உத்தரப் பிரதேசம் மாநிலம் மீரட்டில் பெண்களிடம் நகையைப் பறித்த வழக்கில் இரண்டு ராணுவ வீரர்களை கைது செய்தது காவல்துறை.

News image

நகைப் பறிப்பில் ஈடுபட்ட  2 ராணுவ வீரர்கள் கைது 

Updated On :6 ஆகஸ்ட் 2021, 6:05 am

உத்தரப் பிரதேசம் மாநிலம் மீரட்டில் பெண்களிடம் நகைகளைப் பறித்த வழக்கில் இரண்டு ராணுவ வீரர்களை கைது செய்தது காவல்துறை.

விசாரணையில் நண்பர்களான காஷ்மீரில் பாதுகாப்பு பணியில் இருக்கும் ஆகாஷ் குமார் மற்றும் நாசிக் பகுதியில் இருக்கும் ரவீந்தர் இருவரும்  பணி ஓய்வு நாட்களில் சேர்ந்து நகைப் பறிப்பில் ஈடுபட்டிருக்கிறார்கள். வெறும் சாகச உணர்விற்காக இதைச்  செய்ததாகவும் தெரிவித்திருக்கிறார்கள்.

மேலும் இதுகுறித்து மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சுராஜ் ராய் " இருவரும் தொடர்ந்து சில நகைப் பறிப்பில் ஈடுபட்டு வந்திருக்கிறார்கள். விடுமுறைக்கு ஊருக்கு வந்து திருடிவிட்டு மீண்டும் பணிக்குச் சென்று சந்தேகம் வராத படி நடத்திருக்கிறார்கள். கடைசியாக ஈடுபட நகைப் பறிப்பில் இருவரின் முகமும் , பயன்படுத்திய இரு சக்கர வாகனத்தின் பதிவெண்ணும் சிசிடிவி கேமராவில் சரியாக பதிவாகியிருக்கிறது. முதலில் ஜுலை 11 ஆம் தேதி 60 வயது பெண்மணியிடம் நகையைப் பறித்தனர். அடுத்ததாக ஜுலை 24 பஜார் பகுதியில் மற்றொரு பெண்ணிடம் திருடியிருக்கிறார்கள். வெறும் 'த்ரில்' க்காக இதைச் செய்ததாகவும் அவர்கள் ஒப்புக்கொண்டார்கள் " எனத் தெரிவித்திருக்கிறார் .

கைதான ஆகாஷ் குமார் துப்பாக்கிச் சூடு வீரராகவும் , ரவீந்தர் 400 மீட்டர் தடகள வீரராக இருப்பதும்  குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.