

ஆந்திரத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 2,209 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
ஆந்திரத்தில் ஒரு நாளில் மட்டும் புதிதாக 2,209 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை மொத்தமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 19,78,350ஆக உயர்ந்துள்ளது.
இதையும் படிக்க | பிலிப்பின்ஸில் பரவிய வதந்தியால் தடுப்பூசி மையம் முன் குவிந்த மக்கள்
கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 22 பேர் உயிரிழந்தனர். இதனால் இதுவரை மொத்தமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 13,490ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1,896 பேர் குணமடைந்த நிலையில், இதுவரை மொத்தமாக 19,44,267ஆக அதிகரித்துள்ளது.
இதையும் படிக்க | கர்நாடக எல்லை மாவட்டங்களில் இரவுநேரப் பொதுமுடக்கம் அறிவிப்பு
கரோனாவால் பாதிக்கப்பட்டு பல்வேறு மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் 20,593 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.