'கேரளத்தில் வரும் நாள்களில் கரோனா பாதிப்பு 2 மடங்காகலாம்'
கேரளத்தில் வரும் நாள்களில் கரோனா பாதிப்பு இரண்டு மடங்காக அதிகரிக்கும் என்று மாநில சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் எச்சரித்துள்ளார்.


திருவனந்தபுரம்: கேரளத்தில் வரும் நாள்களில் கரோனா பாதிப்பு இரண்டு மடங்காக அதிகரிக்கும் என்று மாநில சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் எச்சரித்துள்ளார்.
கேரள சட்டப்பேரவையில் பேசிய சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ், கேரளத்தில் தற்போது பாதிக்கப்படும் 90 சதவீத கரோனா நோயாளிகள், அதிதீவிரமாகப் பரவும் தன்மை கொண்ட டெல்டா வகை கரோனா வைரஸால் பாதிக்கப்படுகிறார்கள். நாடு மூன்றாவது கரோனா அலையின் தொடக்கத்திலிருக்கும் நிலையில், மாநிலம் இன்னும் இரண்டாவது கரோனா அலையிலிருந்தே மீளவில்லை. கட்டுப்பாடுகள் முழுமையாக தளர்த்தப்படவில்லை என்று தெரிவித்தார்.
மாநில மக்களின் பாதுகாப்பு உறுதிசெய்யப்பட்ட பிறகே, கட்டுப்பாடுகளை தளர்த்துவது குறித்து அரசு சிந்திக்க முடியும். உடனடியாக தளர்வுகளை நீக்குவதால், மாநிலம் அதற்கு மிகப்பெரிய விலையைக் கொடுக்கவேண்டியதிருக்கும். தற்போது உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படிதான், மாநிலத்தில் கட்டுப்பாடுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன என்று பதிலளித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...