தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

கர்நாடகத்தில் செவிலியர் கல்லூரி மாணவர்கள் 100 பேருக்கு கரோனா

கர்நாடகத்தில் செவிலியர் கல்லூரி மாணவர்கள் 100 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  

News image
Updated On :7 ஆகஸ்ட் 2021, 2:08 pm

DIN

கர்நாடகத்தில் செவிலியர் கல்லூரி மாணவர்கள் 100 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 
கர்நாடக மாநிலம், ஹாசன் மாவட்டத்தில் உள்ள 9 செவிலியர் கல்லூரிகளைச் சேர்ந்த 900க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு நேற்று கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பரிசோதனையில் 100 மாணவர்களுக்கு அறிகுறியற்ற நிலையில் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. 

இதையடுத்து அவர்கள் அனைவரும் தனியார் சிகிச்சை மையத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். கடந்த ஜூலை 26ஆம் தேதி கர்நாடகத்தில் செவிலியர் மாணவர்களுக்கு தேர்வு நடைபெற்றது. 
இதில் பங்கேற்க கேரளத்திலிருந்து 48 மாணவர்கள் வந்தநிலையில் அவர்களில் 21 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.