மாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

ஏழை மக்களுக்கே முன்னுரிமை வழங்கப்பட்டது: பிரதமர் மோடி பெருமிதம்

கரோனா நெருக்கடியின்போது, அரசு மேற்கொண்ட அனைத்து திட்டங்களிலும் ஏழை மக்களுக்கே முன்னுரிமை வழங்கப்பட்டது என பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

News image
கோப்புப்படம்
Updated On :7 ஆகஸ்ட் 2021, 10:12 am

DIN

கரோனா நெருக்கடியின்போது, அரசு மேற்கொண்ட அனைத்து திட்டங்களிலும் ஏழை மக்களுக்கே முன்னுரிமை வழங்கப்பட்டது என பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

மத்தியப் பிரதேச மாநிலத்தில் பிரதான் மந்திரி கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்ட பயனாளிகளிடம் பிரதமர் மோடி இன்று (சனிக்கிழமை) உரையாடினார். அப்போது பேசிய அவர், கரோனா நெருக்கடியின்போது, அரசு மேற்கொண்ட அனைத்து திட்டங்களிலும் ஏழை மக்களுக்கே முன்னுரிமை வழங்கப்பட்டது என பெருமிதம் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், "கரோனா பேரிடரின்போது, 80 கோடி இந்தியர்களுக்கு இலவச ரேஷன் வழங்கப்பட்டது. கடந்த 100 ஆண்டுகளில், மனித இனம்  சந்தித்திராத பேரிடர் கரோனா பெருந்தொற்று.

முகக்கவசம் அணிவது, கைகளை சானிடைசர் போட்டு கழுவுவது, தனி மனித இடைவெளியை கடைபிடித்து போன்றவற்றை மக்கள் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும். 

பிரதான் மந்திரி கரீப் கல்யாண் அன்ன யோஜனா, பிரதான் மந்திரி ரோஸ்கர் யோஜனா உள்ளிட்ட திட்டங்களில் ஏழை மக்களுக்கே முன்னுரிமை வழங்கப்பட்டது. முதல் நாளிலிருந்தே, ஏழை மக்களின் உணவு மற்றும் வேலைவாய்ப்புகளில் கவனம் செலுத்தப்பட்டது" என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.