அஸ்ஸாமில் மகளிருக்கு நிபந்தனையின்றி மாதாந்திர உதவித்தொகை: காங்கிரஸ்அஸ்ஸாமில் மகளிருக்கு நிபந்தனையின்றி மாதாந்திர உதவித்தொகை: காங்கிரஸ் தேர்தல் அறிக்கை!செங்கோட்டையன், என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா போட்டியிடும் தொகுதிகள்!பெரம்பூர், திருச்சி கிழக்கில் விஜய் போட்டி புதுச்சேரியில் விஜய் பிரசாரத்துக்கு அனுமதிகோரி தவெக மனு! தேர்தல் ஆணையக் கடிதத்தில் பாஜக முத்திரை பதித்த விவகாரம்! அலுவலர்கள் நீக்கம் மேற்கு வங்கம்: 294 தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்து போட்டி!
/

தில்லியில் புதிதாக 66 பேருக்கு கரோனா

​தில்லியில் புதிதாக 66 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :8 ஆகஸ்ட் 2021, 3:26 pm

DIN


தில்லியில் புதிதாக 66 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதேசமயம், ஒருவர்கூட நோய்த் தொற்றால் உயிரிழக்கவில்லை என்பதும் பதிவாகியுள்ளது.

தில்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 67,316 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அதில் 66 பேருக்கு மட்டுமே நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டிருப்பதால், தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்படும் விகிதம் 0.10 சதவிகிதமாகப் பதிவாகியுள்ளது.ட

மேலும் 95 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதைத் தொடர்ந்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 14,36,761 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை மொத்தம் 14,11,159 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இன்றைய நிலவரப்படி 536 பேர் மட்டுமே இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தடுப்பூசி:

தில்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 1,19,942 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. 

இதுவரை மொத்தம் 1,06,75,513 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இதில் 77,40,202 பேர் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர். 29,35,311 பேர் இரண்டு தவணை தடுப்பூசியும் செலுத்திக்கொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.