ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

சையனட் செலுத்தி மனைவியைக் கொன்றவர் கைது: சிக்க வைத்த பிரேத பரிசோதனை அறிக்கை

குஜராத் மாநிலம் அங்லேஷ்வர் நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மனைவிக்கு ஏற்றப்பட்ட குளுக்கோஸ் பாட்டிலில், சையனட்டை செலுத்தி கொலை செய்த கணவன் கைது செய்யப்பட்டார்.

News image
சையனட் செலுத்தி மனைவியைக் கொன்றவர் கைது: சிக்க வைத்த பிரேத பரிசோதனை அறிக்கை
Updated On :9 ஆகஸ்ட் 2021, 9:05 am

DIN

பரூச்: குஜராத் மாநிலம் அங்லேஷ்வர் நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மனைவிக்கு ஏற்றப்பட்ட குளுக்கோஸ் பாட்டிலில், சையனட்டை செலுத்தி கொலை செய்த கணவன் கைது செய்யப்பட்டார்.

நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஊர்மிளா வசவ (34) மரணமடைந்து ஒரு மாத காலத்துக்குப் பிறகு, அவரது கணவர்தான் குற்றவாளி என்பதை காவல்துறையினர் கண்டுபிடித்து கைது செய்துள்ளனர்.

முதற்கட்டமாக, ஊர்மிளாவின் பிரேத பரிசோதனை அறிக்கையில், அவரது உடலில் சையனட் விஷம் ஊசி மூலம் செலுத்தப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக நடத்தப்பட்ட விசாரணையில், ஊர்மிளாவின் கணவர் ஜிக்னேஷ் பட்டீல், அவரது பணியாற்றம் தொழிற்சாலையிலிருந்து சயனைட் விஷத்தை வாங்கி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.