பெட்ரோல் விலை உயர்வு குறித்து விவாதிக்க வலியுறுத்தி மாநிலங்களவையில் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸை காங்கிரஸின் ரிபுன் போரா செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்தார்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 19 தொடங்கி நடைபெற்று வருகின்றன. ஆகஸ்ட் 13 வரை நடைபெறும் கூட்டத்தில், பெகாஸஸ் விவகாரம், பெட்ரோல் விலை உயர்வு, வேளாண் சட்டங்கள் உள்ளிட்டவை குறித்து விவாதிக்க கோரி கடந்த 15 நாள்களாக எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், மாநிலங்களவையில் பெட்ரோல் விலை உயர்வு குறித்து விவாதிக்க கோரி இன்று ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸை காங்கிரஸ் உறுப்பினர் ரிபுன் போரா தாக்கல் செய்தார்.