தில்லியில் நாள்தோறும் கரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 37 பேருக்கு மட்டுமே கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தில்லி சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
தில்லியில் ஒரு நாளில் மட்டும் புதிதாக 37 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை மொத்தமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 14,36,889-ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் 47 பேர் குணமடைந்த நிலையில், இதுவரை மொத்தமாக குணமடைந்து வீடு திரும்பியோர் எண்ணிக்கை 14,11,327-ஆக உயர்ந்துள்ளது.
புதிதாக எந்தவொரு உயிரிழப்பும் பதிவாகவில்லை. எனினும் இதுவரை மொத்தமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 25,068-ஆக உள்ளது.
கரோனாவால் பாதிக்கப்பட்டு பல்வேறு மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் 494 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.