மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

காஷ்மீர் : தீவிரவாதிகள் பதுக்கி வைத்திருந்த ஆயுதங்கள் பறிமுதல்

சமீப காலமாக காஷ்மீரில்  தீவிரவாதிகளின் தாக்குதல் தொடர்ந்து வருவதை தடுக்கும் விதமாக பாதுகாப்புப் படை மற்றும் காவல்துறையினர் சேர்ந்து தீவிரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

News image

காஷ்மீர் : தீவிரவாதிகள் பதுக்கி வைத்திருந்த ஆயுதங்கள் பறிமுதல் ( கோப்புப்படம் )

Updated On :11 ஆகஸ்ட் 2021, 9:35 am

சமீப காலமாக காஷ்மீரில்  தீவிரவாதிகளின் தாக்குதல் தொடர்ந்து வருவதை தடுக்கும் விதமாக பாதுகாப்புப் படை மற்றும் காவல்துறையினர்  சேர்ந்து தீவிரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

தீவிர கண்காணிப்பு மற்றும் தேடுதல் பணியில் தீவிரவாதிகள் சிக்கிக்கொள்வதும் பின் தாக்குதலில் கொல்லப்படுவதும் தொடர்ந்து வருகிறது.

இந்நிலையில் இன்று (புதன்கிழமை) காலை பந்திபோரா மாவட்டத்தில் குரேஸ் பகுதியில் தீவிரவாதிகள் பதுக்கிவைத்திருந்த ஆயுதத்தை பாதுகாப்புப் படையினர் கைப்பற்றினர்.

3 ஏ.கே ரக துப்பாக்கிகள் ,12 ஏ.கே மேகசின்ஸ் ,  358 துப்பாக்கி குண்டுகள் , இரண்டு கை துப்பாக்கிகள் , கை துப்பாக்கிகளின் மேகசின்ஸ் மற்றும்  6 கையெறி குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.