காஷ்மீர் : தீவிரவாதிகள் பதுக்கி வைத்திருந்த ஆயுதங்கள் பறிமுதல்
சமீப காலமாக காஷ்மீரில் தீவிரவாதிகளின் தாக்குதல் தொடர்ந்து வருவதை தடுக்கும் விதமாக பாதுகாப்புப் படை மற்றும் காவல்துறையினர் சேர்ந்து தீவிரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
தீவிர கண்காணிப்பு மற்றும் தேடுதல் பணியில் தீவிரவாதிகள் சிக்கிக்கொள்வதும் பின் தாக்குதலில் கொல்லப்படுவதும் தொடர்ந்து வருகிறது.
இதையும் படிக்க | நீரஜ் சோப்ராவுக்குக் கெளரவம்: ஆகஸ்ட் 7, தேசிய ஈட்டி எறிதல் தினம்
இந்நிலையில் இன்று (புதன்கிழமை) காலை பந்திபோரா மாவட்டத்தில் குரேஸ் பகுதியில் தீவிரவாதிகள் பதுக்கிவைத்திருந்த ஆயுதத்தை பாதுகாப்புப் படையினர் கைப்பற்றினர்.
3 ஏ.கே ரக துப்பாக்கிகள் ,12 ஏ.கே மேகசின்ஸ் , 358 துப்பாக்கி குண்டுகள் , இரண்டு கை துப்பாக்கிகள் , கை துப்பாக்கிகளின் மேகசின்ஸ் மற்றும் 6 கையெறி குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.