நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தி வருகிறார்.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் ஜூலை 19 தொடங்கி நடைபெற்று வந்தன. ஆகஸ்ட் 13 வரை நடைபெறவிருந்த கூட்டம் எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் இரண்டு நாள்களுக்கு முன்னதாகவே முடிக்கப்பட்டன.
இந்நிலையில், நடந்து முடிந்த குளிர்கால தொடரை பற்றி அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
இந்த கூட்டத்தில், மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ஆதீர் ரஞ்சன் செளத்ரி, திமுகவின் டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
மேலும், திரிணமூல் காங்கிரஸ், சிரோமணி அகாலி தளம், ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் அவைத் தலைவர்களும் பங்கேற்றுள்ளனர்.