செங்கோட்டையன், என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா போட்டியிடும் தொகுதிகள்!பெரம்பூர், திருச்சி கிழக்கில் விஜய் போட்டி புதுச்சேரியில் விஜய் பிரசாரத்துக்கு அனுமதிகோரி தவெக மனு! தேர்தல் ஆணையக் கடிதத்தில் பாஜக முத்திரை பதித்த விவகாரம்! அலுவலர்கள் நீக்கம் மேற்கு வங்கம்: 294 தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்து போட்டி!
/

பள்ளிகளில் நாள்தோறும் 10,000 கரோனா பரிசோதனைகள்: பஞ்சாப் அரசு உத்தரவு

பள்ளிகளில் நாள்தோறும் 10 ஆயிரம் கரோனா பரிசோதனைகளை நடத்துமாறு பஞ்சாப் அரசு உத்தரவிட்டுள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :11 ஆகஸ்ட் 2021, 3:09 pm

DIN


பள்ளிகளில் நாள்தோறும் 10 ஆயிரம் கரோனா பரிசோதனைகளை நடத்துமாறு பஞ்சாப் அரசு உத்தரவிட்டுள்ளது.

கரோனா பொது முடக்கம் காரணமாக மூடப்பட்ட பள்ளிகள் பஞ்சாபில் கடந்த 2-ம் தேதி திறக்கப்பட்டன. ஆனால், லுதியானாவில் இரண்டு பள்ளிகளில் 20 மாணவர்களுக்கு நோய்த் தொற்று இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, புதன்கிழமை அரசுப் பள்ளி ஒன்றில் 6 மாணவர்களுக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இந்த நிலையில் பஞ்சாப் தலைமைச் செயலர் தலைமையில் கரோனா ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தைத் தொடர்ந்து, பள்ளிகளில் நாள்தோறும் குறைந்தபட்சம் 10,000 ஆர்டி-பிசிஆர் பரிசோதனைகளை நடத்த வேண்டும் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டன. மேலும் இரண்டு தவணை தடுப்பூசியும் செலுத்திய ஆசிரியர்கள் மட்டுமே பள்ளிகளுக்கு வருவதை துணை ஆணையர்கள் உறுதி செய்ய வேண்டும் என்றும் தலைமைச் செயலர் அறிவுறுத்தியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.