சஞ்சு சாம்சன், ஜேமி ஓவர்டன் அசத்தல்! சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி!!தில்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் அதிரடி சதம் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் ஒன்றாக இணைந்து தேர்தல் பிரசாரம்! தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

டெல்டா மாவட்டங்களில் 41 தொகுதிகளிலும் திமுக வெற்றி: கே.என். நேரு நம்பிக்கை

தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களில் 41 தொகுதிகளிலும் திமுக வெற்றி என அமைச்சர் கே.என். நேரு நம்பிக்கை

News image

அமைச்சர் கே.என். நேரு - ஏஎன்ஐ

Updated On :29 மார்ச் 2026, 7:44 am

தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களில் 41 தொகுதிகளிலும் திமுக வெற்றி என அமைச்சர் கே.என். நேரு நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

திருச்சியில் செய்தியாளர்களுடன் தமிழக நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என். நேரு பேசுகையில், "2026 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் திருச்சியில் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம். மு.க. ஸ்டாலினே மீண்டும் முதல்வராக வேண்டுமென மக்கள் விரும்புகிறார்கள்.

திமுகவின் வெற்றியில் திருச்சியும் முக்கிய பங்கு வகிக்கும். டெல்டா மாவட்டங்களில் உள்ள 41 தொகுதிகளிலும் திமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெறும்" என்று தெரிவித்தார்.

மேலும், திருச்சி கிழக்கில் தவெக தலைவர் விஜய் போட்டியிடுவது குறித்த கேள்விக்கு, "ஜனநாயகத்தில் யார் வேண்டுமானாலும் தேர்தலில் போட்டியிடலாம். ஆனால், யார் போட்டியிட்டாலும், திமுகவின் வெற்றியை உறுதிசெய்யும் அனைத்து பணிகளையும் நாங்கள் மேற்கொள்வோம்" என்றும் கே.என். நேரு தெரிவித்தார்.

தமிழகத்தில் சட்டப்பேரவைக்கான தேர்தல் ஏப்ரல் 23 ஆம் தேதியில் நடைபெறவுள்ள நிலையில், அதற்கான பணிகளில் கட்சிகள் ஈடுபட்டுள்ளன. மேலும், தேர்தல் பிரசாரத்திலும் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.

இந்த நிலையில், மதச்சார்பற்ற கூட்டணிக் கட்சிகளுக்கு ஆதரவு தெரிவித்து, மார்ச் 31 ஆம் தேதிமுதல் திருவாரூரிலிருந்து முதற்கட்ட தேர்தல் பிரசாரத்தை திமுக தலைவரும் முதல்வருமான மு.க. ஸ்டாலின் தொடங்குகிறார்.

Summary

People want MK Stalin to become Chief Minister again, says Minister KN Nehru

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.