எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியையடுத்து மாநிலங்களவையின் புனிதம் சிதைக்கப்படுவதாக கூறிய அவைத் தலைவர் வெங்கையா நாயுடு பிற்பகல் 12 மணிவரை ஒத்திவைத்தார்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 19இல் தொடங்கி நடைபெற்று வருகிறது. கூட்டத்தொடர் தொடங்கிய நாள் முதலே அவையில் பெகாஸஸ் விவகாரத்தை விவாதிக்க வேண்டுமென எதிர்க்கட்சிகள் இரு அவைகளிலும் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிக்க | முன்கூட்டியே முடிக்கப்பட்ட மக்களவை: தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
இதையடுத்து 17வது நாள் கூட்டம் தொடங்கியவுடன் அவைத் தலைவர் வெங்கையா நாயுடு பேசுகையில், நேற்றைய தினம் சில உறுப்பினர்கள் மேஜைகள் மீது ஏறி காகிதங்களை கிழித்தது அவையின் புனிதம் சிதைக்கப்படுவதாக கூறினார். இந்த செயல்களை நினைத்து இரவில் தூங்கக்கூட முடியவில்லை என பேசினார்.
இதற்கிடையே எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவைத் தலைவர் இருக்கைக்கு முன்பு கோஷங்கள் எழுப்ப தொடங்கியவுடன் பிற்பகல் 12 மணிவரை அவையை ஒத்திவைத்தார்.