எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியையடுத்து மாநிலங்களவையின் புனிதம் சிதைக்கப்படுவதாக கூறிய அவைத் தலைவர் வெங்கையா நாயுடு பிற்பகல் 12 மணிவரை ஒத்திவைத்தார்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 19இல் தொடங்கி நடைபெற்று வருகிறது. கூட்டத்தொடர் தொடங்கிய நாள் முதலே அவையில் பெகாஸஸ் விவகாரத்தை விவாதிக்க வேண்டுமென எதிர்க்கட்சிகள் இரு அவைகளிலும் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிக்க | முன்கூட்டியே முடிக்கப்பட்ட மக்களவை: தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
இதையடுத்து 17வது நாள் கூட்டம் தொடங்கியவுடன் அவைத் தலைவர் வெங்கையா நாயுடு பேசுகையில், நேற்றைய தினம் சில உறுப்பினர்கள் மேஜைகள் மீது ஏறி காகிதங்களை கிழித்தது அவையின் புனிதம் சிதைக்கப்படுவதாக கூறினார். இந்த செயல்களை நினைத்து இரவில் தூங்கக்கூட முடியவில்லை என பேசினார்.
இதற்கிடையே எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவைத் தலைவர் இருக்கைக்கு முன்பு கோஷங்கள் எழுப்ப தொடங்கியவுடன் பிற்பகல் 12 மணிவரை அவையை ஒத்திவைத்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

தமிழ்நாடு முழுவதும் டி-சேவா மையங்கள் தொடங்குவதற்கான பயிற்சி: விண்ணப்பங்கள் வரவேற்பு!
7 ஏர்பேக், 360° கேமரா... ஜென்ஸீ இளைஞர்களுக்காக ஹூண்டாய் வெர்னா!
டிமான்டி காலனி - 3 குரு சோமசுந்தரம் அறிமுக விடியோ!

கோடை வெப்பத்திலிருந்து காப்பாற்ற வரும் ஜெட் ஸ்ட்ரீம்! சென்னைக்கு மழை எப்போது?
வீடியோக்கள்

Podcast | மௌனம் கலைப்பாரா விஜய்? | News and Views | Epi - 14 |
தினமணி வீடியோ செய்தி...

தொகுதி பங்கீட்டில் வருத்தமா? கலைஞருக்கு நான் கொடுத்த வாக்கு! வைகோ பேட்டி | DMK | MDMK
தினமணி வீடியோ செய்தி...

Ravindran Duraisamy Interview | விஜய்க்கு ரஜினி ஸ்டைலில் பதிலடி | TVK Vijay | Rajini | Aadhav Arjuna
தினமணி வீடியோ செய்தி...

விஸ்வநாத் அண்ட் சன்ஸ் டீசர்!
தினமணி வீடியோ செய்தி...

