மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

சாதி ரீதியான கணக்கெடுப்பில் மத்திய அரசு அமைதி காப்பது ஏன்? காங்கிரஸ் கேள்வி

சாதி ரீதியான கணக்கெடுப்பு எடுக்காமல் மத்திய அரசு அமைதி காப்பது ஏன்? என காங்கிரஸ் எம்பி அபிஷேக் சிங்வி மாநிலங்களவையில் கேள்வி எழுப்பியுள்ளார்.

News image
கோப்புப்படம்
Updated On :11 ஆகஸ்ட் 2021, 11:23 am

DIN

சாதி ரீதியான கணக்கெடுப்பு எடுக்காமல் மத்திய அரசு அமைதி காப்பது ஏன்? என காங்கிரஸ் எம்பி அபிஷேக் சிங்வி மாநிலங்களவையில் கேள்வி எழுப்பியுள்ளார்.

சாதி ரீதியான கணக்கெடுப்பை மேற்கொள்ள வேண்டும் என பிகார், ஒடிசா மாநில முதலமைச்சர்கள் தொடர்ந்து வலியுறுத்திவந்த பின்னரும், அதை எடுக்காமல் மத்திய அரசு அமைதி காப்பது ஏன்? என காங்கிரஸ் எம்பி அபிஷேக் சிங்வி மாநிலங்களவையில் இன்று (புதன்கிழமை) கேள்வி எழுப்பியுள்ளார்.

பிற்படுத்தப்பட்டோரை அடையாளம் காணும் அதிகாரத்தை மீண்டும் மாநில அரசுக்கு வழங்கும் வகையில் அரசியலமைப்பு சட்டத்தில் 127ஆவது திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுகுறித்த மசோதா மக்களவையில் நேற்று  நிறைவேற்றப்பட்ட நிலையில், 127ஆவது சட்ட திருத்தம் குறித்து மாநிலங்களவையில் இன்று விவாதம் நடைபெற்றது.

இதுகுறித்து பேசிய காங்கிரஸ் எம்பி அபிஷேக் சிங்வி, "உண்மையான நிலவரம் குறித்து அறிந்து கொள்ள சாதி ரீதியான கணக்கெடுப்பு தேவை. ஏனெனில், கிட்டத்தட்ட 30 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு அதிகப்பட்ச அளவை தாண்டியுள்ளது.

சாதி ரீதியான கணக்கெடுப்பு எடுக்க வேண்டும் என அனைத்து தரப்பிலிருந்தும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வேலைகளில் பிற்படுத்தப்பட்டோருக்கு என 17 சதவிகிதம் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், அவர்களின் மக்கள் தொகை அதிகமாக உள்ளது. இது முக்கியமான விவகாரம். சாதி ரீதியான கணக்கெடுப்பு எடுக்காமல் ஏன் ஓட வேண்டும். 

உங்களின் பிகார் முதலமைச்சரும் ஓடிசா முதலமைச்சரும் இந்த விவகாரத்தில் கோரிக்கை முன்வைத்துள்ளனர். உங்களின் சொந்த கட்சியை சேர்ந்த எம்பியே கணக்கெடுப்பு எடுக்க வேண்டும் என தெரிவி்த்துள்ளார். நீங்கள் ஏன் அமைதியாக இருக்கிறீர்கள்?" என்றார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.