கர்நாடக மாநிலம் பெங்களுருவில் கடந்த 10 நாட்களில் 499 குழந்தைகளுக்கு புதிதாக கரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்திருகிறது.
இதில் 0-9 வயது கொண்ட குழந்தைகளில் 88 பேரும் 10-19 வயதில் உள்ளவர்கள் 305 பேரும் பாதிப்படைந்திருக்கிறார்கள்.
தொற்று உறுதி செய்யப்பட்ட 499 பேரில் 263 பேர் கடந்த ஐந்து நாட்களில் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
இதையும் படிக்க | நாட்டில் 52.36 கோடி தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன: மத்திய அரசு
தொடர்ந்து சுகாதாரத்துறை தொற்றுப் பரவலை தடுக்கும் முன் எச்சரிக்கை ஈடுபாடுகளில் இருந்தாலும் அடுத்த சில வாரங்களில் தற்போதைய எண்ணிக்கையை விட மூன்று மடங்கு பாதிப்பு இருக்கும் என்றும் கரோனா தடுப்பூசிகளை எடுத்துக்கொண்ட பெற்றோர்கள் குழந்தைகளை மக்கள் கூடும் இடங்களுக்கு அழைத்துச் செல்லக்கூடாது என்றும் சுகாதாரத்துறை அறிவித்திருக்கிறது.
மேலும் மாநிலத்தில் இதுவரை கரோனாவால் 15,919 பேர் இறந்திருப்பதாகவும் நாள் ஒன்றுக்கு 1500 பேர் பாதிப்படைகிறார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.